கடந்த 2017 ஆம் ஆண்டு, உத்தண்டராயுனிபாலம் கிராமத்தைச் சார்ந்த கிஞ்சுபள்ளி சங்கர ராவ், அமராவதி நகரில் அமையவிருக்கும் புதிய தலைநகரில் அவருக்கு ஒதுக்கபட்ட 1,000 சதூர அடி குடியிருப்பு நிலத்தை விஜயவாடாவைச் சார்ந்தவர்களுக்கு விற்றுள்ளார். இத வழியாக அவருக்கு 2 கோடி ருபாய் கிடைத்துள்ளது. இந்தத தொகையின் வழியாக 90 ஆண்டுகள் பழமையான தனது நிலத்தை 80 லட்ச ரூபாய் செலவு செய்து இரண்டு அடுக்கு மாடி வீடாக மாற்றியுள்ளார். “நான் இந்த பணத்தை பயன்படுத்தி எனது வீட்டை மறுகட்டுமானம் செய்தேன். செவ்வுரோலேட் கார் மற்றும் மோட்டார் வாங்கினேன். எனது மகளை மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா அனுப்பியுள்ளேன். மேலும்,அவரது திருமணத்திற்க்காகவும் கூட கொஞ்சம் பணத்தை சேமித்துவைத்துள்ளேன்” மகிழ்ச்சியாக கூறினார்.
குண்டூர் மாவட்டத்தில் உள்ள உத்தண்டராயுனிபாலம் கிராமம் கிருஷ்ணா ஆற்றின் வடகரையில் உள்ள 29 கிராமங்களில் ஒன்றாகும். இந்தப் பகுதியில் தான் அமராவதி புதிய தலைநகரின் பசுமைத்தலைநகர் பகுதி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தத் தலைநகரின் முதற் பகுதி கட்டுமானத்திற்காக மட்டும் அமராவதி நீடித்த தலைநகர் நகர மேம்பாட்டுத் திட்டத்தின் நிலம் திரட்டும் (LPS)திட்டத்தின் கீழ் 33,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை அரசு கையகப்படுத்தவுள்ளது.
தற்போது இந்த 29 கிராமங்களில் புதிய கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன. சில கட்டி முடிக்கப்பட்டுள்ளன, இதர கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு, புதிய தலைநகருக்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்தக் கிராமங்களில் நிலத்தரகு நிறுவனங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அதிக பயனடைந்தது ஆதிக்கச் சாதியைச் சார்ந்த நிலவுடமையாளர்களே. குறிப்பாக கம்மா சாதியைச் சார்ந்தவர்கள். “என்னைப் போன்ற 90 விழுக்காடு நிலவுடமையாளர்கள் அவர்களது பங்கு நிலத்தை(அரசால் ஒதுக்கப்பட்ட) விற்று விட்டு வீடு கட்டிவிட்டனர்” என்றார் சங்கர ராவ் (கட்டுரையின் மேலுள்ள முகப்புப் படத்தின் வலது பக்கத்தில் சங்கர ராவ்வின் , அண்டைவீட்டார் நாரின சுப்பா ராவ் உள்ளார்)









