பேரணிக்கு நடுவே அமைதியாக இருந்தவர் எம்.எஸ். சாந்தகுமார். பொருத்தமான பெயர். சத்திஸ்கரின் பிலாய் ஸ்டீல் ஆலையின் முன்னாள் பணியாளர். பார்ப்பதற்கு அமைதியான தோற்றத்தில் இருந்தாலும், நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார் சிஐடியுவின் அனுபவமிக்க செயற்பாட்டாளர். “நரேந்திர மோடிக்கு எதிராக எனக்கு தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. ராகுல் காந்திக்கும் எதிராகவும் கிடையாது,” என்கிறார் அவர். “மக்களை துன்புறுத்தும் கொள்கைகளைத்தான் நான் எதிர்க்கிறேன்.”
சத்திஸ்கர் மற்றும் அண்டை மாநிலங்களான ஜார்க்கண்ட், மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி ஏழைகளுக்கு எதிரான வளர்ச்சியைத் தொடர்ந்தால், “வரும் தேர்தலில் அவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படும்.”
பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவது, போதிய ஊதியமின்மை, சத்தீஸ்கரில் நில உரிமைகளை பாதுகாப்பவர்கள் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். கலகலப்புடன் அவர் பேசும்போது, மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் சுவரொட்டியை தடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறார்.
டெல்லியில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் பேரணியின் இரண்டு முக்கிய அம்சங்களை அவர் எடுத்துரைத்தார். தொழிலாளர்கள், விவசாயிகளின் கூட்டணி வளர்வது, சிவில் உரிமைகள் மற்றும் பொருளாதார உரிமைகளை கூட்டாக பாதுகாத்தல். அனைத்திந்திய கிசான் சபா (AIKS), பொதுச் செயலாளரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் மஸ்தூர் கிசான் சங்கர்ஷ் பேரணியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான ஹன்னன் மொல்லாவின் கருத்துபடி, “காலப்போக்கில் இப்பேரணி திருப்புமுனையாக அமையும். விவசாயிகளின் போராட்டம் மெல்ல மக்களின் இயக்கமாக மாறும்.”






