விடுதலை! விடுதலை! ஒரு நூறு கோடி அழுக்கு விலங்குகள் அரண்மனையின் அருகில் காத்திருந்தன. அந்த விலங்குகள் ஒற்றுமையாக ஆகாயத்தையே அசைத்ததை அவர் வெறுத்தார். விடுதலை! விடுதலை! அந்த மிருகங்கள் கண்ணியமான வாழ்க்கை வாழத் துணிந்ததை அவர் வெறுத்தார். விடுதலை! விடுதலை! அந்த பூச்சிகள் ஒற்றுமையின் இருண்ட கலைகளில் தேர்ச்சி பெறும் உண்மையை அவர் வெறுத்தார். விடுதலை! விடுதலை! மண்ணையும் வியர்வையையும் கம்பீரமான நாற்றுகளாக மாற்ற அந்த பூச்சிகளுக்கு எவ்வளவு துணிச்சல் ? என்ன வித்தை இது? என்ன பைத்தியக்காரத்தனம் இது? விடுதலை! விடுதலை! புத்தியில்லாத புழுக்களுக்கு தங்கள் உழைப்புக்கு ஈடாக பணத்தை கோருவதற்கு என்ன தைரியம்?
பொங்கி எழும் விலங்குகளை அவர் மீண்டும் அதன் கூண்டுகளில் வைக்க வேண்டும். மேகங்களின் கோபுரத்தில் வாழும் புன்னகை பிரபு, கடவுளின் சக்கரவர்த்திக்கு நன்றி. எங்கோ இருந்து புதுமையான நோய் ஒன்று தோன்ற அந்த வணிகத்தில் அவரின் பணப்பெட்டி நிரம்பி வழிந்தது. அது மந்தையை குறைத்தது. விடுதலை! விடுதலை! நிலத்திலிருந்து கிளம்பும் நாற்றத்துக்கான ஒரே மருந்தான அமுதத்தை அவர் கைகளில் உறுதியாக வைத்திருந்தார். அப்பூச்சிகள் இந்த அமுதத்தை இலவசமாகக் கோருவது எவ்வளவு அபத்தமானது?
ஏக்கத்துடன் அவரின் புதிய அரண்மனையின் கோபுரங்களை ஜன்னல் வழியாக அவர் பார்க்க இரவு அவரது ராஜ்யத்தை கவ்வியது. விடுதலை! விடுதலை! அழியட்டும் அந்த குரல்கள், மண்ணை மரகத பச்சையாக்கும் அவ்விரல்கள் அழியட்டும். அமைதி! ஜன்னல் அருகே ஏதோ சலசலத்தது. இலைகளுக்கு நகங்களையும் பூக்களுக்கு கருஞ்சிவப்பு பிணங்களையும் கொண்ட ஒரு விசித்திரமான கொடி படர்ந்து மேலே ஊர்ந்து வந்தது.
துருத்திய அரை ஜன்னல் வெளியில் இரண்டு நிலாக்கள் எழும்பின. ஒன்று வெளியேற்றப்பட்ட எங்கள் ரம்ஜான் பிறை. மற்றொன்று ட்ராக்டரின் தனிச் சக்கரம்.












