உழைக்கும் மக்கள் பிய்ந்து போன காலணிகளையும் பாதுகாத்து வைக்கிறார்கள். சுமை சுமப்பவர்களின் காலணிகள் பள்ளமாக இருக்கும். மரவெட்டியின் காலணிகளில் முட்கள் தைத்திருக்கும். என் சொந்த காலணிகளை நான் அடிக்கடி ஊக்கு குத்தி வைப்பேன்.
இந்தியா முழுவதுமான என் பயணங்களில் காலணிகளின் பல படங்களை பிடித்திருக்கிறேன். அவற்றின் கதையாடல்களையும் அவதானிக்கத் தொடங்கியிருக்கிறேன். அந்த காலணிகளின் கதைகள் வழியாக என் சொந்த பயணமும் வெளிப்படுகிறது.
சமீபத்தில் ஒடிசாவின் ஜெய்ப்பூருக்கு சென்றிருந்தபோது, பராபங்கி மற்றும் புராணமந்திரா கிராமங்களின் பள்ளிகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பழங்குடி மக்கள் கூடியிருக்கும் அறைக்கு வெளியே ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காலணிகளை எப்போதும் நான் பார்த்திருக்கிறேன்.
தொடக்கத்தில் நான் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் பயணம் தொடங்கிய மூன்று நாட்களில், பிய்ந்து போன காலணிகளையும் ஓட்டைகள் கொண்டவற்றையும் நான் கவனிக்கத் தொடங்கினேன்.
























