கமல் ஷிண்டேவின் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் 150 கிலோ அரிசி, 100 கிலோ கோதுமை மாவு, 30 கிலோ உருளைக்கிழங்கு, 50 கிலோ வெங்காயம் சேகரிக்கப்பட்டுள்ளது. “இந்த உணவு எல்லோருக்குமானது," என்கிறார் 55 வயதான கமல். "ஒவ்வொரு நபரும் தங்கள் நாளின் உணவை எடுத்துச் செல்கிறார்கள். மீதமுள்ள நாட்களில் நாங்கள் வழியில் [சாலை ஓரத்தில்] உணவு தயாரிப்போம்,"என்று கூறுகிறார்.
அவரது கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30 - 40 விவசாயிகள் இந்த கூட்டுப் பொருட்களுக்கு பங்களிப்பு செய்துள்ளனர். அவை நேற்று பிப்ரவரி 20 அன்று தொடங்கிய பேரணியின் போது அவர்களுக்கு உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் என்று போராட்டத்தின் முக்கிய அமைப்பாளரான அகில இந்திய கிசான் சபாவின் திண்டோரி தாலுகா ஒருங்கிணைப்பாளரான அப்பா வதானே கூறுகிறார்.










