ஒரு நாகப்பாம்பு, உறுதியான சக்வான் (தேக்கு) மரத்தை சுற்றிக் கிடக்கிறது. ராட்டி தோலா கிராமவாசிகள் கடுமையாக முயன்றும், அதை விரட்ட முடியவில்லை.
ஐந்து மணி நேரங்கள் கழித்து, கிராமவாசிகள் ஒருவழியாக முந்த்ரிகா யாதவை அழைக்கிறார்கள். பக்கத்து வால்மீகி புலிகள் சரணாலயத்தில் காவலாளியாக இருந்தவர் அவர். புலிகள், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், பாம்புகள் என 200-க்கும் மேற்பட்ட விலங்குகளை காப்பாற்றியவர் அவர்.
முந்த்ரிகா வந்ததும், நாகப்பாம்பு இறங்க வைக்க முயற்சித்தார். அதுவும் இறங்கியது. “ஒரு மூங்கில் குச்சியை அதன் வாயில் வைத்து, கயிறை இறுக்கினேன். பிறகு அதை சாக்கில் போட்டு, காட்டுக்குள் சென்று அதை விட்டார்,” என்கிறார் 42 வயது நிரம்பிய அவர். “20-25 நிமிடங்கள்தான் ஆனது.”






