மூன்று வயது சிறுவன் விஹான் கொட்வடே, தற்போது வரை தன்னை புலி தாக்கியது குறித்துக் கனவு கண்டு, அவனது தாய் சுலோச்சனாவை இறுகக்கட்டிக் கொள்கிறான்.
கடந்த மே 2018 ஆம் ஆண்டு, சிறுவன் விஹான் கொட்வடே தெண்டு இலை சேகரிப்பதற்காகச் சென்ற, அவனது தந்தை பீர் சிங்(25 வயதுடையவர்) கொட்வடே உடன் இரு சக்கர வாகனத்தில் சென்றான். கோடைக்காலங்களில் மத்திய இந்தியப்பகுதிகளில் உள்ள காடுகளைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் தெண்டு இலை சேகரிப்பது தான் வாழ்வாதாரம் ஈட்டும் முதன்மைத் தொழில். தெண்டு இலைகள் காயவைக்கப்பட்டு,பின்னர் பீடி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



