" என் பையில் வைத்திருந்த வாழைப் பழங்களைச் சாப்பிட்டுதான் உயிர்பிழைத்தேன்." - மார்ச் 22 ஆம் தேதி 'மக்கள் ஊரடங்கு உத்தரவு' நடைமுறையில் இருந்தபோது சுரேந்திர ராம் எப்படி அன்றைய பொழுதைக் கடந்தார் என்பது குறித்து என்னிடம் அவர் தொலைபேசியில் கூறியதே, இது. அன்று, மும்பையில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தபோது, வீட்டிற்குள் வசிப்பவர்கள் கதவைத் திறந்து வெளியில் வரவில்லை. பரேலில் உள்ள டாடா நினைவு மருத்துவமனைக்கு அருகில் உள்ள நடைபாதையில் உட்கார்ந்தார், சுரேந்திரா.
அவரின் வயது 37; அவருக்கு வாய்ப் புற்றுநோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு தொடங்கியது முதல் ஒரு வாரமாக நடைபாதைதான் அவருக்கு 'வீடு'. அவர் உள்பட தெருக்களில் தங்கும் எத்தனையோ நோயாளிகளுக்கு ’வீட்டுக்குள் முடங்குவது’ என்பதே இல்லை. தென் மத்திய மும்பையில் அரசாங்க ஆதரவுடன் சேவை அளிக்கும் இந்த மருத்துவமனையில், புற்றுநோயாளிகளுக்கு. மானியக் கட்டணத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்தியா முழுவதுமிருந்து வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காக இங்கு வருகிறார்கள்.
"எனக்கான பரிசோதனை முடிந்துவிட்டது. நான்கு மாதங்களுக்குப் பிறகு வருமாறு மருத்துவர் என்னிடம் சொல்லிவிட்டார்." என்கிறார், சுரேந்திரா. ஆனால், பீகார் மாநிலம், சமஸ்ட்டிப்பூர் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய ஊரான பொட்டிலியாவுக்கு திரும்பிச்செல்ல அவரால் முடியவில்லை. ஒரு முறை தொடர்வண்டிச் சேவை குறைக்கப்பட்டு, மார்ச் 25 முதல் நாடளவிலான முடக்கத்துடன் முற்றிலுமாக நிறுத்தப்பட்டடு. “ இப்போது 21 நாள்களுக்கு எல்லாமே முடக்கம் என்று கூறுகிறார்கள். எனக்கு எந்த செய்தியும் தெரியவில்லை. சுற்றி உள்ளவர்களிடம்தான் விவரம்கேட்க வேண்டும். அதுவரை நான் இந்த நடைபாதையில்தான் வசிக்கப்போகிறேனா?” என்று கேட்டார் சுரேந்திரா.
மார்ச் 20 அன்று நான் சுரேந்திராவைச் சந்தித்தேன். அப்போது, அவர் ஒரு ஆரஞ்சுநிற நெகிழி விரிப்பின் மீது தரையில் உட்கார்ந்தபடி, வாயின் ஒரு பக்கமாக வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவரின் இடது நாசியில் ஒரு குழாய் செருகப்பட்டு இருந்தது. "உணவு என் தொண்டையில் இறங்காது; அதனால் எனக்கு குழாய் தேவை." என விவரித்தார். அவரின் உடைகள், மருத்துவக் குறிப்பாவணங்கள், மருந்துகளுடன் வாழைப் பழங்களையும் அடைக்கப்பட்டபடியான ஒரு கருப்பு நிறப் பையும் விரிப்பின் மீது இருந்தது.
மார்ச் 20 அன்று நான் சுரேந்திராவைச் சந்தித்தேன். அப்போது, அவர் ஒரு ஆரஞ்சுநிற நெகிழி விரிப்பின் மீது தரையில் உட்கார்ந்தபடி, வாயின் ஒரு பக்கமாக வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார். அவரின் இடது நாசியில் ஒரு குழாய் செருகப்பட்டு இருந்தது. "உணவு என் தொண்டையில் இறங்காது; அதனால் எனக்கு குழாய் தேவை." என விவரித்தார். அவரின் உடைகள், மருத்துவக் குறிப்பாவணங்கள், மருந்துகளுடன் வாழைப் பழங்களையும் அடைக்கப்பட்டபடியான ஒரு கருப்பு நிறப் பையும் விரிப்பின் மீது இருந்தது.










