ஜீன் 22ம் தேதி வேலைக்காக வீட்டிலிருந்து கிளம்பியபோது வழக்கம்போல், திலிப் வாக் தனது மனைவி மங்கள் மற்றும் மகள் ரோஷினி ஆகிய இருவருக்கும் வழக்கம் போல கையசைத்து விடைபெற்றுச் சென்றார். அடுத்த முறை அவர் அவர்களை பார்த்த போது வெள்ளை உரை சுற்றப்பட்ட உடல்களாக பார்த்தார், இரண்டு நாட்கள் கழித்து உள்ளூர் மருத்துவமனையில்.
அன்று மாலை நான் வீடு திரும்பியபோது அவர்கள் வீட்டில் இல்லை என்று திலிப் கூறினார். மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள காட்வியாச்சிமேலி ஆதிவாசிகள் குடியிருப்பில் உள்ள, தனது குடிசையில் மெல்லிய விளக்கின் ஒளியில் அமர்ந்துகொண்டு அவர் நம்மிடம் பேசினார்.
அவர்கள் தொலைந்துவிட்டதாக நினைத்து, 30 வயது மங்கள் மறறும் 3 வயது ரோஷினியையும் அந்த கிராமம் முழுக்க தேடினார். அவரின் மூத்த மகள் நந்தினியிடம் அவர்களைப்பற்றி விசாரித்துள்ளார். ஆனால், நந்தினிக்கு அதுகுறித்து தெரியவில்லை என்று 35 வயதான திலீப் கூறினார். அன்று இரவும் அவர்கள் வீடு திரும்பாததால், எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது என்று அவர் மேலும் கூறினார்.
அடுத்த நாள் காலை முதல், அவரது குடியிருப்பு பகுதிகளை தாண்டியும், திலிப் அவர்களை தேடத்துவங்கினார். அருகில் உள்ள சில குடியிருப்புகளில் தேடினார். மதியவேளையில், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மங்களின் அத்தையை சந்தித்து, அவருக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டேன் என்று, காலி பாத்திரங்கள் அடுக்கிவைத்திருக்கும் மண் சுவருக்கு அருகில், அமர்ந்திருந்த திலீப் நம்மிடம் கூறினார். ஆனால் அவருக்கும் ஒன்றும் தெரியவில்லை என்று அவர் தெரிவித்தாக கூறினார்.
கட்கரி ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த திலீப் அன்றிரவு வீடு திரும்பினார். ஆனால், மங்களும், ரோஷினியும் அன்றும் வீடு வந்து சேரவில்லை. நந்தினி மட்டுமே இருந்தார். ஜீன் 24ம் தேதி காலை, புது நம்பிக்கையுடன் மீண்டும் தேடத்துவங்கினார். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து ஏதாவது தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அன்று மதியம் கிடைத்த தகவல் அவர் எதிர்பார்த்தது கிடையாது.
காட்வியாச்சிமேலியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, ஜவ்ஹர் தாலுகாவைச் சேர்ந்த டெஹாரே கிராம காட்டுப்பகுதியில் ஒரு பெண்ணும், சிறிய குழந்தை ஒன்றும் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அவர்களின் போட்டோக்களும் வாட்சப்பில் பரப்பப்பட்டது. தங்கள் கிராமத்திற்கு வெளியே உள்ள பகுதியில் வசிக்கும், திலிப் என்ற சிறுவன் தனது போனில் அந்த படங்களை வைத்திருந்தான். அந்தப்படங்களை அவன் என்னிடம் காண்பித்தபோது, அது எனது மனைவியும், மகளும்தான் என்று தான் அவனிடம் கூறியதை திலீப் நினைவு கூர்ந்தார்.








