‘பாவுல்’ என்ற சொல் சமஸ்கிருதத்தின் ‘வதுலா’ என்பதிலிருந்து வந்தது. இதன் பொருள் பித்து கொள்ளுதல், ஆட்கொள்ளுதல் அல்லது ஒழுங்கற்றது என்று பொருள். ‘பாவுல்’ என்பது வங்கத்தில் தோன்றிய இசைப் பண்பாட்டையும் குறிக்கிறது.
பாவுல் சமூகத்தினர் பொதுவாக நாடோடிகள். பாவுல்கள் இஸ்லாம், இந்து மற்றும் பவுத்த சமயங்களின் ஒத்திசைவைக் கொண்டுள்ளனர். அவர்கள் பல்வேறு மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர். சமூகத்தின் மரபு விதிகளை மறுக்கும் அவர்கள் தனித்துவமான சக்தியாக இசையைக் கொண்டுள்ளனர். அவர்கள் இந்த வாழ்க்கைமுறையைத் தேர்வு செய்கின்றனர். குருவினால் தூண்டப்படுகின்றனர்.
பாவுல் சமூக ஆண்களும், பெண்களும் தனித்துவமானவர்கள், வெட்டப்படாத சடை விழுந்த முடி, காவி உடை அல்லது புடவை, ருத்ராட்ச மாலைகள் அணிந்தபடி ஒற்றை கம்பி கொண்ட தம்புராவை சுமக்கின்றனர். வாய் வழியாக கடத்தப்படும் இந்த இசை இன்றும் தொடர்கிறது. பாடல்களைப் பாடி அதற்குப் பதிலாக யாசகத்தைப் பெற்று மட்டுமே அவர்கள் பிழைக்கின்றனர். பாடகரின் புகழைப் பொறுத்து ஒரு பாவுல் ரூ.200-1000 வரை சம்பாதிக்கிறார்




