இது பவகடாவின் அழகிய அஞ்சல் அட்டை தருணம். முதலில் பார்க்கும்போது அப்படிதான் தோன்றுகிறது. தெருக்கள் முழுவதும் பூகேன்வில்லா மலர் கொத்துகள், வண்ணமயமான வீடுகள், அலங்கரிக்கப்பட்ட கோயில்கள் மற்றும் அதன் இசை ரீங்காரம் கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற நகரத்தில் நடப்பவர்களின் காதுகளை சென்றடைகிறது. இவை அழகாக தோன்றலாம், ஆனால் அப்படியல்ல. ஏனென்றால் நாம் இங்கு மலம் பற்றி பேசப் போகிறோம்.
வசதியான மத்தியதர வர்க்க உணர்விற்காக இந்த வார்த்தையை மறைக்க வேண்டியுள்ளது. ஆனால் ரமனஞனப்பாவிற்கு அத்தகைய வசதி இல்லை. “வெறுங்கையால்தான் மலத்தை கழுவுவேன்” என்கிறார். துப்புரவு தொழிலாளியான இவர், பவகடா தாலுகாவிலுள்ள கன்னமெடி கிராமத்தைச் சேர்ந்தவர். இதுவே மோசமானதில்லை என்றால், இந்த மனிததன்மையற்ற வேலையை குறைக்கும் ஒரே காரணியும் வரைபடத்தில் இல்லாமல் போகும்: அது, ரமனஞனப்பாவிற்கு கடைசியாக சம்பளம் கொடுக்கப்பட்டது எப்போது தெரியுமா? அக்டோபர், 2017.
கழிவை எப்படி பிரித்து வைக்க வேண்டும் போன்ற சுவரோவியங்கள் நகரத்தின் சுவர்களை அலங்கரிக்கின்றன. ஆனால் இது அரசால் அணுமதிக்கப்பட்ட முகப்பில் ஒன்று மட்டுமே. நமக்கு தெரிந்தவரை, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் 20 பேர், அனைவரும் மடிகா சமூகத்தைச் சேர்ந்த தலித்துகள், சுவரோவியங்கள் வரையப்பட்ட அரங்கத்திலிருந்து 10மீ தூரத்திலுள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு மாதமும் ரமனஞ்னப்பாவிற்கு கிடைக்கும் 3,400 ரூபாய், ஐந்து நபர்கள் கொண்ட அவரது குடும்பத்திற்கு – அவரது மனைவி மற்றும் பள்ளி செல்லும் மூன்று குழந்தைகள் – 30 நாட்களுக்கு போதுமானதாக இல்லை. அந்த சம்பளமும் இவருக்கு கடந்த ஒன்பது மாதங்களாக கொடுக்கப்படவில்லை.
சிலர் தங்கள் ஊதியத்தை இன்னும் பெறவில்லை, மற்றவர்களோ சில மாதங்களுக்கு முன் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பை இன்னும் பெறாமல் உள்ளனர்.












