தமிழ்நாட்டின் கோத்தகிரி பஞ்சாயத்தைச் சேர்ந்த வெள்ளரிக்கோம்பை கிராமத்தில் பிரபலமான மனிதர் ஆர். கிருஷ்ணா. பாரம்பரியமான குறும்பர் வண்ணம்தீட்டும் முறைகளில் அவருக்கு இருக்கும் நிபுணத்துவம்தான் அவரை அங்கு பலருக்கும் தெரிந்த ஒருவராக மாற்றியது. சரியான அளவுகளில், சிறிய அளவுகளில் அறுவடைத் திருவிழாக்களை, மதச் சடங்குகளை, தேன் எடுக்கும் முறைகள் மற்றும் நீலகிரியின் பழங்குடியினரின் பிரத்யேகமான பழக்கங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து ஓவியங்கள் வரைந்து வண்ணம் தீட்டுகிறார்.
காட்டுக்குள் இவரைச் சந்தித்தோம். தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பலாத் தோட்டங்களுக்கு மேல் அமைந்திருக்கும் இடத்தில் இரண்டு மணி நேர மலையேற்றத்துக்குப் பிறகு அந்த சந்திப்பு நிகழ்ந்தது. மலைவழிப்பாதையில் ஹேர்பின் வளைவைச் சுற்றி, என்னோடு வந்த இருவரும், நானும் சூரிய ஒளி ஊடாக கிருஷ்ணாவின் வசிப்பிடத்தை அடைந்தோம்.
நான் தகவல் தெரிவிக்காமல் தீடிரென வந்ததைக் குறித்து எந்த முகச்சுளிப்பும் இல்லாமல், அவர் செய்யும் விஷயங்களைக் குறித்து விளக்கத் தொடங்கினார். ஆரஞ்சு நிறத்திலான ஒரு கோப்புறையில் இருந்து மஞ்சள் பையில் வைத்திருந்த பல செய்தித்தாள் பிரசுரங்களையும், புகைப்படங்களையும், அவரது கலைப் படைப்புகளில் சிலவற்றையும் எடுத்துக் காண்பித்தார். அவருடன் இந்த விஷயங்களை எப்போதும் எடுத்துச் செல்கிறார், அதை பற்றி யாரும் கேட்க கூடும் என்று எதிர்பார்ப்பு இருக்க கூடும்.








