“கவனமாக வாருங்கள்“ என்று முகமது இலியாஸ் எச்சரிக்கை விடுக்கிறார். அவரும், ஷபீர் ஹீசேனும் ஹண்டர்மேன் ப்ரோக்கில் உள்ள குடியிருப்புகளில் நான் நடந்து செல்லும்போது இவ்வாறு கூறுகிறார்கள். நாம் இந்த ஆட்களின்றி விடப்பட்ட குடியிருப்புக்கு வந்திருக்கிறோம். லடாக்கில் உள்ள கார்கில் சந்தையிலிருந்து 8 கிலோ மீட்டர் மலையேறி இங்கு வந்துள்ளோம். குறுகலான வளைந்து நெளிந்த சாலைகளின் வழியே, அதன் மயக்கமுறச்செய்யும் வளைவுகளின் வழியாக பயணித்து இங்கு வந்துள்ளோம்.
நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர், இதன் வளமான தோற்றத்தை கூறவேண்டுமெனில், அளவுக்கதிகமான நீர்வள ஆதாரங்கள் மற்றும் இமயமலைக்கு மத்தியில் உயர்ந்த இடமாக இருந்தது. கார்கிலின் இரண்டு கிராமங்களான போயன் மற்றும் கர்கேச்சு (மக்கள்தொகை கணக்கெடுப்பில் போயான் மற்றும் கார்கிட் என்று குறிப்பிடப்பட்டுள்ளது)வில் 30 குடும்பங்கள் வசித்து வந்தன. இது ப்ரோக் என்று அழைக்கப்படுகிறது (பல்டி மொழியில் ப்ரோக் என்றால், கோடை காலத்தில் ஆடு, மாடுகள் மேய்பதற்கான சொர்க்கம் என்று பொருள்). இங்கு குடியிருப்புகள் கற்கள், மரம், உமி மற்றும் மண் கொண்டு ஆறு படிகள் மற்றும் அதற்கு மேலும் கட்டப்பட்டுள்ளது. அந்த தொடர் கட்டுமானத்தின் பாரத்தை மலைகள் தாங்கிக்கொள்கின்றன. அது மலையுடன் 2.700 மீட்டர் உயரத்தில் கலக்கிறது.
இங்குள்ள ஒவ்வொரு வீடும் நுணுக்கமாக அடுத்த வீட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் வசிப்பவர்கள் 5 முதல் 7 அடி வரை பனிக்கட்டிகளால் உறைந்திருக்கும் டிசம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர் காலங்களில் வெளியே செல்வது குறைக்கப்படுகிறது. “முடிந்தளவு கதகதப்பான சூழலை உருவாக்குவதற்காக முந்தைய காலங்களில், மேற்கூரை, கதவுகள், ஜன்னல்கள் சிறிதாகவும், தாழ்வாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கின் மேற்கூரையிலும் அறையில் ஒரு புற சுவர் காற்றோட்டத்திற்காகவும், குளிர்ந்த வாடை காற்றை அனுபவிப்பதற்காகவும் வில்லோ என்ற மரத்தின் கிளைகளால் பின்னப்பட்ட தடுப்புகளால் உருவாக்கப்பட்டுள்ளது“ என்று இலியாஸ் நம்மை மாடியின் மேலே ஒரு உடைந்த பகுதிக்கு அழைத்துச்செல்லும்போது கூறுகிறார்.











