இது தினகர் ஐவாலேவுக்கு ஒரு அமைதியான ஆண்டாகும். பல மாதங்களாக அவரது புல்லாங்குழல் எந்த இசையையும் உருவாக்கவில்லை. “இந்த கருவி நேரடியாக வாயுடன் தொடர்பு கொள்கிறது. இந்த கொரோனா காலங்களில் இதுபோன்ற தொடர்புகளில் ஆபத்து உள்ளது, ”என்று அவர் தனது மண் மற்றும் செங்கல் வீட்டிற்குள் இருக்கும் பட்டறையில் அமர்ந்து கூறுகிறார்.
அவருக்கு அடுத்ததாக ஒரு பழைய மர பெட்டியில் கருவிகள் நிறைந்துள்ளது. ஒரு வருடம் முன்பு வரை அவர் பயன்படுத்தியதைப் போலவே அவர் இதைப் பயன்படுத்தினால், ஒரு மூலையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மூல ’லகுனா’ மஞ்சள் மூங்கில் குச்சிகளை ஒரு நல்ல புல்லாங்குழலாக மாற்ற அவருக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரமே ஆகும்.
அதற்கு பதிலாக, 74 வயதான தினகர் நாம் பேசும்போது உயிரற்ற மூங்கிலை வெறித்துப் பார்க்கிறார். அவர் தனது கைவினைப்பொருளை உருவாக்க சுமார் 150,000 மணிநேரம் பணியாற்றி, ஒரு நாளைக்கு 10 மணிநேரம் உழைத்து, ஆண்டுக்கு 250 முதல் 270 நாட்களுக்கு ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக உழைத்திருக்கிறார் - 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஊரடங்கு தொடங்கியதிலிருந்து அவரது பணிகள் நின்று போனது.
அவர் 19 வயதில் புல்லாங்குழல் தயாரிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, ஐவாலே இவ்வளவு நீண்ட இடைவெளி எடுத்ததில்லை. அவர் வழக்கமாகச் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா முழுவதும் பல கண்காட்சிகளில், நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களை கடந்து விற்பனை செய்ய செல்வதுப்போல, கடந்த வருடம் செல்லவில்லை. கண்காட்சிகள் போன்ற பெரிய கூட்டங்கள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை.












