பழுதுபார்ப்பு தேவைப்படும் மண் கால்வாய் ஓரமாக நடந்து செல்லும்போது காண்ட்பரி கிராம மக்களை ஜோபன் லால் வரவழைக்கிறார். தன்னுடன் சேருமாறு குடும்பங்களுக்கு உரைக்கச் சொல்கிறார். ஒரு கதகதப்பான காலையில், "உங்கள் மண்வெட்டிகளையும் மண்வாரிகளையும் எடுத்துச் சென்று தபால் நிலையத்தின் பின்னால் என்னைச் சந்தியுங்கள்" என்று அவர் கூறுகிறார். ஆனால் 20 தொழிலாளர்களைக் கூட ஒன்று சேர்ப்பது அவருக்கு கடினம். "சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, குறிப்பாக குறுவை மற்றும் சம்பா விதைப்பு பருவங்களின்போது, கோஹ்லி அழைக்கும்போது, 60-80 ஆண்கள் வேலைக்கு வருவார்கள்" என்று அவர் நினைவு கூர்ந்தார். மண் கால்வாய்கள் பொதுவாக இரண்டு மீட்டர் அகலமும், இரண்டு மீட்டர் ஆழமும் கொண்டவை. மேலும் 100 மீட்டர் முதல் ஒரு கிலோமீட்டர் வரை கூட நீட்டிக்க முடியும்.
55 வயதான ஜோபன் லால், காங்க்ரா மாவட்டத்தின் பாலம்பூர் தாலுகாவில் சுமார் 400 பேர் வசிக்கும் காண்ட்பரியின் கோஹ்லி ஆவார். (மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த கிராமம் கம்லேஹர் என பட்டியலிடப்பட்டுள்ளது). அவரது தாத்தா ஒரு கோஹ்லி இல்லை என்றாலும், அவர் இந்த வேலையை தனது தந்தையிடமிருந்து பெற்றார். "யாரோ ஒருவர் இந்த வேலையை விட்டு வெளியேற முடிவு செய்திருக்கலாம், இனியும் இது ஒரு மரியாதைக்குரியப் பணி அல்ல" என்று அவர் கூறுகிறார். "என் தந்தையை கிராமவாசிகள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்."
பாரம்பரியமான மண் கால்வாய் கோஹ்லி அதிகாரமாக இருந்தார். இந்த உள்ளூர் நீர் அமைப்பை நிர்வகிப்பதில் ஆழமான அறிவைக் கொண்டிருப்பவர். அவர் மண் கால்வாய் தேவிக்கு (கோஹ்லி பாரம்பரியமாக எப்போதும் ஓர் ஆண் என்றாலும், இவர் ஒரு பெண் தெய்வம்) தியாகங்களையும் பிரார்த்தனைகளையும் செய்தார். கடந்த காலங்களில், இமாச்சல பிரதேசத்திலுள்ள பலர் தங்கள் நீர் கால்வாய்கள் ஒரு தெய்வத்தால் பாதுகாக்கப்படுவதாக நம்பினர். வறட்சி காலங்களில் கூட, அவர்கள் கால்வாய்களை நன்கு கவனித்துக்கொண்டால், தெய்வம் ஏராளமான விநியோகத்துடன் பலன் அளிக்கும். வெள்ளத்தைத் தடுக்க, கோஹ்லி ஒரு சூஃபி துறவிக்கும் பிரார்த்தனையைச் செய்வார். (கிராமவாசிகள் அவரின் பெயரை நினைவுக்கூர முடியவில்லை). இது ஒரு வேளை காங்க்ரா பள்ளத்தாக்கின் சமய இணைப்பைப் பற்றி பேசியது.








