" குழந்தைகள் வலுவாக கழுதைப்பால்", என்று ஒரு குரல் கூறியது, நான் ஆச்சரியப்பட்டுத் திரும்பினேன்.
அங்கு அமைதியாக நின்று கொண்டு தலையசைத்துக் கொண்டிருக்கும் கஜோலுடன், சுக்தேவும் நின்று கொண்டிருந்தார். சத்தமே காட்டாமல் அவரது அருகில் நடந்து சென்றது.
நான் ஆச்சரியப்பட்டேன், ஆனால் அந்த தெருவில் இருந்தவர்கள் யாரும் கஜோல் கழுத்தில் கயிறு கட்டி குச்சியுடன் அவர் வழி நடத்திச் செல்வதை பார்த்ததாகத் தெரியவில்லை.
சில நேரங்களில் எட்டு வயது கஜோலுக்கு, பதிலாக எட்டு வயதாகும் ராணியும், வீடு வீடாக நடந்து செல்லும் போது சுக்தேவ் கழுதைப்பாலில் நற்பண்புகளை விவரிக்கிறார். அன்று, ராணி மலாடின் கிழக்கில் இருக்கும் அப்பபாடா சேரியில் இருக்கும் வீட்டிலிருந்தது. கஜோலுடன் நிற்பது அவளது 5 மாத கழுதைக்குட்டி. சிதைந்த வலது பின்னங்காலுடன் பிறந்த இரண்டு வயது லாங்டியும் வீட்டில் இருந்தது.
அவர்களுடன் சுக்தேவின் கூட்டு குடும்பத்திற்கு சொந்தமான மேலும் 6 பெண் கழுதைகள் உள்ளன - அவரது மருமகன் ராம்தாஸ் முடாவை வைத்திருக்கிறார், அதே நேரத்தில் அவரது மூத்த சகோதரர் வாமனிடம் ஐந்து கழுதைகள் உள்ளன, அவற்றுக்குப் பெயர்கள் இல்லை.
சுக்தேவிற்கு திரைப்படங்கள் என்றால் கொள்ளை பிரியம் என்று அவரது மனைவி ஜெயஸ்ரீ கூறுகிறார், அதனால் அவர்களது கழுதைகளுக்கு பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன, கடந்த காலத்தில் மாதுரி தீக்ஷித் என்ற பெயர் கொண்ட கழுதையும் இருந்தது.
புறநகர் வடக்கு மும்பையில் உள்ள அப்பபாடாவில் உள்ள ஒரு மலையடிவாரத்தில் மனிதர்களும் கழுதைகளும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். நெருக்கமான குடிசைகளில் அம்மக்கள் வாழ்கின்றனர், அதிலிருக்கும் கம்பத்தில் கயிற்றில் கழுதைகள் கட்டப்பட்டுள்ளன. அக்கம்பக்கத்தினர் இதனைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அதே பாதையில் வசித்து வரும் சாஹில் நாங்கள் இங்கு வருவதற்கு முன்பே அவர்கள் இங்கு தான் வசித்தனர்", என்று கூறுகிறார்.
இந்த கழுதைக் குட்டியின் தந்தையான ராஜா முரட்டுத்தனமாக மாறி, சுற்றியிருக்கும் மக்களைத் தாக்கத் துவங்கியது என்று அவர்கள் கூறுகின்றனர். "அவன் அதிகமாக குறும்பு செய்வான், பெண் கழுதைகள் அவனது பின்னால் ஓடும், தெருக்களில் நடந்து செல்லும் மக்களை முட்டித் தள்ளுவான் - ஆனால் ஒருவரையும் அவன் காயப்படுத்தியது கிடையாது", என்று ராஜாவின் உரிமையாளரான ராமதாஸ் கூறுகிறார். அதனால் அவனை நான்கு மாதங்களுக்கு முன்பு அவர்களது கிராமத்தில் விற்றிருக்கின்றார்.
ஜாதவ் குடும்ப உறுப்பினர்கள் சில நேரங்களில் மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள ஜெஜூரி தாலுகாவில் ஆண்டுதோறும் நடைபெறும் கண்டோபா கோவில் கண்காட்சியில் கழுதைகளை வாங்கவோ, விற்கவோ செய்கின்றனர், அங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விலங்கு வர்த்தகம் செய்ய வருகின்றனர். அங்கு பலவீனமான விலங்குகளுக்கு 5,000 ரூபாயிலிருந்து, அதிகமான சுமைகளை சுமக்க கூடிய உறுதியான கழுதைகள் 25,000 ரூபாய் வரை விலை பெறும்.











