2018 நவம்பர் மாதம் தீபாவளிக்கு முந்தைய காலை நேரம். மேற்கு ஒடிசாவைச் சேர்ந்த சுமார் 30-40 இசைக் குழுவினர் ராய்பூரில் உள்ள புத்தா தலாப் சதுக்கத்தில் திரண்டனர். அவர்களின் உடைகள், கருவிகளை வைத்துப் பார்த்தால் அவர்கள் பாலாங்கிர், காலாஹண்டி அல்லது நுவாபடா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று என்னால் சொல்ல முடியும். அவர்கள் அனைவரும் பட்டியலினத்தில் காண்டா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களின் நிகழ்ச்சியை உள்ளூரில் கானா – பாஜா என்கின்றனர். இது ஒடிசாவின் புகழ்பெற்ற நாட்டுப்புற இசையாகும். திருமணங்கள், பூஜைகள் மற்றும் பிற கொண்டாட்டங்கள் பல்வேறு நிகழ்வுகளுக்கான இசை வாத்தியங்களைக் கொண்ட குழுக்கள். ஆண்களை மட்டுமே கொண்ட 5 – 10 இசைக் கலைஞர்கள் குழு அமைக்கின்றனர். ஒவ்வொருவரும் தாப், டோல், ஜாஞ், மஹூரி, நிஷான், தஷா போன்ற மரபு கருவிகளை வைத்துள்ளனர்.
நான் கொஸ்லியில் (அல்லது சம்பல்புரி) மேற்கத்திய ஒடிசா மொழியில் இசைக் கலைஞரிடம் யாருக்காக காத்திருக்கிறீர்கள் என கேட்டேன். என்னுடைய பேச்சைக் கேட்ட பாலாங்கிர் (போலாங்கிர்) மாவட்டம் தித்லாகர் தாலுக்காவில் உள்ள கந்தகால் கிராமத்தைச் சேர்ந்த பெனுதார் ச்சுரா, சுமார் 30 ஆண்டுகளாக இங்கு வந்து கொண்டிருப்பவர், பதிலளித்தார், “நாங்கள் ராவத் – நச்சா குழுவினர்களுக்காக காத்திருக்கிறோம். அவர்கள் நடனத்திற்காக எங்களை வேலைக்கு எடுப்பார்கள்.”







