“சரியான மணமகள் கிடைக்க அவருக்கு என் கணவர் வீட்டாரால் பணம் கொடுக்கப்பட்டது. இது இங்கு வழக்கத்தில் இருக்கும் முறைதான்.” இருபது வயதுகளில் இருக்கும் ருமா கீச்சத், தன் கதையை பகிர்ந்து கொள்கிறார். “தூரப் பகுதியிலிருந்து வந்து இங்கு (ராஜஸ்தான்) வாழ, எல்லாராலும் முடியாது. என் அண்ணி…”
“50,000 ரூபாய் கொடுத்து அவரை வாங்கினோம். இருந்தும் அவள் ஏழு வயது மகளை விட்டுவிட்டு ஓடிப் போனாள்.” மருமகள் சொன்ன விஷயத்தை தன்னுடைய சொந்த விஷயம் போல மாற்றி சொல்லும் யஷோதா கீச்சதுக்கு (பெயர் மாற்றப்பட்டது) வயது 67.
“அந்தப் பெண்! மூன்று வருடங்கள் இருந்தாள் அவள்.” பஞ்சாபிலிருந்து வந்து ஓடிப் போன மூத்த மருமகளை பற்றி பேசுகையில் இன்னும் கோபத்துடன் பேசுகிறார் யஷோதா. “அவளுக்கு மொழிப் பிரச்சினை இருந்தது. எங்களின் மொழியை கற்றுக் கொள்ளவே இல்லை. ஒரு ரக்ஷாபந்தனின்போது, சகோதரனையும் குடும்பத்தையும் பார்க்க செல்வதாக முதன்முறையாக சொன்னாள். நாங்களும் போக அனுமதித்தோம். திரும்பி அவள் வரவில்லை. ஆறு வருடங்கள் ஆகி விட்டன,” என்கிறார் அவர்.
யஷோதாவின் இரண்டாம் மருமகளான யஷோதா, வேறொரு தரகரின் மூலம் ஜுன்ஜுனூனுக்கு வந்தார்.
திருமணமான வயது அவருக்கு தெரியாது. “பள்ளிக்கு நான் சென்றதில்லை. எனவே பிறந்த வருடம் எனக்கு தெரியாது,” என்கிறார் அவர், பழுப்பு நிற அலமாரியில் ஆதார் அட்டையை தேடியபடி.
அறையின் கட்டிலில் அவரின் ஐந்து வயது மகள் விளையாடுவதை பார்த்தேன்.
“அநேகமாக என் ஆதார், கணவரின் பர்ஸில் இருக்கலாம். எனக்கு 22 வயதாகப் போகிறதென நினைக்கிறேன்,” என்கிறார் ருமா.










