அடர் கானகப்பகுதியில் இருக்கும் குத்ரேமுக் தேசியப் பூங்காவில், காலங்காலமாக வாழ்ந்து வந்த சமூகங்கள், அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். அவர்களில் குத்லுரு கிராமத்தை சேர்ந்த மலேகுடியா சமூகமும் ஒன்று. அங்கிருக்கும் 30 வீடுகளில் மின்சாரமோ குடிநீரோ இன்றும் கிடையாது. “இங்குள்ள மக்களுக்கு மின்சாரம் முக்கியத் தேவை,” என்கிறார் குத்லூருவின் விவசாயியான ஸ்ரீதர மலேகுடியா. கர்நாடகாவில் தஷினாவில் பெல்தாங்காடி தாலுகாவில் குத்லுரு இருக்கிறது.

எட்டு வருடங்களுக்கு முன் ஸ்ரீதரா, வீட்டு மின்சாரத்துக்கு ஒரு பிகோ ஹைட்ரோ ஜெனரேட்டரை வாங்கினார். தங்களின் மின்சாரத்தை சொந்தமாக உற்பத்தி செய்து கொள்ளும் 11 குடும்பங்களில் அவரின் குடும்பமும் ஒன்று. “பிற வீடுகளில் மின்சாரமும் இல்லை, ஹைட்ரோ மின்சாரமும் இல்லை, நீர் இணைப்பும் இல்லை.” இப்போது கிராமத்தின் 15 குடும்பங்கள், பிகோ ஹைட்ரோ கருவிகள் கொண்டு ஹைட்ரோ மின்சாரத்தை உற்பத்தி செய்தனர். சிறிய நீர் டர்பைன் 1 கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. வீட்டில் சில பல்புகள் எரிய போதுமான அளவு அது.

வன உரிமை சட்டம் கொண்டு வந்து 18 வருடங்கள் ஆகியும் அச்சட்டம் குறிப்பிடும் அடிப்படை வசதிகளான நீர், சாலைகள், பள்ளிகள் மருத்துவமனைகள் போன்றவை குத்ரேமுக் தேசியப் பூங்காவில் வசிக்கும் மக்கள் கிடைக்கப் பெறவில்லை. பட்டியல் பழங்குடியான மலேகுடியா சமூக மக்கள் மின்சார இணைப்பை பெற இன்னும் போராடி வருகின்றனர்.

காணொளி: ‘மின்சாரம் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது’

பின்குறிப்பு: இக்காணொளி 2017-ல் உருவாக்கப்பட்டது. இன்று வரை குத்லுருவுக்கு மின்சார இணைப்பு கிடைக்கவில்லை

தமிழில்: ராஜசங்கீதன்

Vittala Malekudiya

विट्ठल मालेकुड़िया एक पत्रकार हैं और साल 2017 के पारी फेलो हैं. दक्षिण कन्नड़ ज़िले के बेलतांगाड़ी तालुक के कुद्रेमुख राष्ट्रीय उद्यान में स्थित कुतलुरु गांव के निवासी विट्ठल, मालेकुड़िया समुदाय से ताल्लुक़ रखते हैं, जो जंगल में रहने वाली जनजाति है. उन्होंने मंगलुरु विश्वविद्यालय से पत्रकारिता और जनसंचार में एमए किया है, और वर्तमान में कन्नड़ अख़बार 'प्रजावाणी' के बेंगलुरु कार्यालय में कार्यरत हैं.

की अन्य स्टोरी Vittala Malekudiya
Editor : Vinutha Mallya

विनुता माल्या पेशे से पत्रकार और संपादक हैं. वह पूर्व में पीपल्स आर्काइव ऑफ़ रूरल इंडिया की एडिटोरियल चीफ़ रह चुकी हैं.

की अन्य स्टोरी Vinutha Mallya
Translator : Rajasangeethan

चेन्नई के रहने वाले राजासंगीतन एक लेखक हैं. वह एक प्रमुख तमिल समाचार चैनल में बतौर पत्रकार काम करते हैं.

की अन्य स्टोरी Rajasangeethan