37 வயது கானி சாமா, இயற்கையியலாளரும் நால் சரோவர் ஏரி மற்றும் குஜராத் பறவைகள் சரணாலயத்தின் படகுக்காரரும் ஆவார். அகமதாபாத் மாவட்டத்தின் விராம்கம் தாலுகாவிலிருக்கும் 120 சதுர கிலோமீட்டர் ஏரி, ஆர்டிக் பெருங்கடலிலிருந்து இந்தியப் பெருங்கடலுக்கு மத்திய ஆசிய பறக்கும்பாதையின் வழியாக வரும் வலசைப் பறவைகளை ஈர்க்கும் இடமாகும்.
“பறவைகளில் 350 வகைகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்,” என்கிறார் அவர் நால் சரோவருக்கு வரும் வலசைப் பறவைகளிலுள்ள பலவற்றையும் சேர்த்து. தொடக்கத்தில் இங்கு 240 பறவை இனங்கள் வந்தன. இப்போது அந்த எண்ணிக்கை 315 ஆக உயர்ந்திருக்கிறது.”
கானி தன் பால்யத்தை ஏரியை சுற்றிதான் கழித்திருக்கிறார். “என் தந்தையும் தாத்தாவும் இந்தப் பறவைகளை காக்க வனத்துறைக்கு உதவியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் வனத்துறைக்கு படகுக்காரர்களாக பணிபுரிந்தனர். இப்போது நானும் அதைதான் செய்கிறேன்,” என்கிறார் அவர். “1997ம் ஆண்டில் இந்த வேலையை தொடங்கும்போது, அவ்வப்போது வேலை கிடைக்கும். பிற நேரங்களில் இருக்காது,” என அவர் நினைவுகூருகிறார்.
2004ம் ஆண்டில் நிலவரம் மாறியது. பறவைகளை காக்கவும் ரோந்து பார்க்கவும் வனத்துறை அவரை படகுக்காரராக பணிக்கமர்த்தியது. “மாதத்துக்கு ரூ.19,000 வருமானம் ஈட்டுகிறேன்.”










