ஸ்ரீநகரின் ஷிகராக்கள்: அசைவற்ற நீர் கடுமையான இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது
காஷ்மீரை விட்டு சுற்றுலாப் பயணிகள் வெளியேற வேண்டும் என்ற தனது ஆகஸ்ட் மாத அறிவுறுத்தலை அரசாங்கம் நீக்கி இருந்தாலும், ஷிகராவாலாக்கள் ஒரு சில வாடிக்கையாளர்களையே கண்டிருக்கின்றனர். இந்த ஆறு மாத கால சுற்றுலா பருவம்தான் ஆண்டு முழுவதும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான பணத்தைக் கொடுக்கிறது. அவர்களில் பலர் இப்போது நெருக்கடியான நிலையை சந்தித்து வருகின்றனர்