ஆரே-ஆதிவாசிகள்-அதன்-பின்னர்-தான்-நாங்கள்-எங்களது-இந்த-நிலத்தை-இழந்தோம்

Mumbai Suburban, Maharashtra

Nov 27, 2019

ஆரே ஆதிவாசிகள்: 'அதன் பின்னர் தான் நாங்கள் எங்களது இந்த நிலத்தை இழந்தோம்'

வடக்கு மும்பையில் 3,200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆரே வனப் பகுதி, ஒரு காலத்தில் 27 ஆதிவாசி கிராமங்கள் இருந்த பகுதி. ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல பல திட்டங்களுக்காக இந்த நிலத்தின் பெரும்பகுதி கையகப்படுத்தப்பட்டது. அவற்றுள் பால் பதப்படுத்தும் நிறுவனம் மற்றும் ஒரு திரைப்பட நகரம் ஆகியவையும் உள்ளடங்கும். சமீபத்தில் இந்த நிலத்தில் மும்பை மெட்ரோவிற்கான வாகன நிறுத்தும் இடம் அமைக்க 2,600 மரங்கள் வெட்டப்பட்டன. அதற்கு எதிராக சட்ட போராட்டங்களும் நடைபெற்றன. இதை நடைமுறைப் படுத்துகையில் பல ஆதிவாசி குடும்பங்களின் வீடுகளும் இடிக்கப்பட்டது. அவர்களது விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது; அவர்களது வாழ்வாதாரமே அழிக்கப்பட்டிருக்கிறது. பலர் இதனை எதிர்த்து போராடினர், பேரணி நடத்தினர், மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் இந்த வலையொலியில் கூறியிருப்பது போல : 'மெட்ரோ வேண்டும் என்று கோரி ஒரு பேரணி கூட ஒருங்கிணைக்கப் படவில்லை'

Author

Aakanksha

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Aakanksha

ஆகாங்ஷா பாரியில் செய்தியாளராகவும் புகைப்படக் கலைஞராகவும் இருக்கிறார். கல்விக் குழுவின் உள்ளடக்க ஆசிரியரான அவர், கிராமப்புற மாணவர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை ஆவணப்படுத்த பயிற்சி அளிக்கிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.