100 நாள் வேலையும் வறட்சியோடு போராடும் முதியவர்களும்
ஒரு காலத்தில் செழிப்புடன் விளங்கிய தமிழ்நாட்டின் காவேரி டெல்டா, இன்று நீண்ட நெடிய வறட்சியால் காய்ந்துபோயிருக்கிறது. விவசாய சூழல் மொத்தமாக நொறுங்கிவிட்டது. பல கிராமங்களில் இளைஞர்கள் வேறு வேலை தேடி இடம்பெயர்ந்துவிட்டார்கள். எஞ்சியிருக்கும் முதியவர்கள் அடுத்த வேளை உணவுக்காக முதுகெலும்பு உடைய வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்