நான் பிரிக்கப்படாத காலஹந்தி மாவட்டத்தில் பிறந்தேன். பஞ்சம், பசியால் நேரும் இறப்புகளாலும் துயரத்தாலும் புலம்பெயர்வது போன்றவை இங்கு மக்களின் வாழ்க்கையில் ஒன்றாக கலந்துள்ளது. சிறுவனாகவும் வளர்ந்த பிண் ஒரு ஊடகவியலாளனாகவும் இதுபோன்ற சம்பவங்களை தெளிவாக பார்த்துள்ளதோடு இதுகுறித்து செய்தியும் வெளியிட்டுள்ளேன். ஆகையால், இந்த மக்கள் ஏன் புலம்பெயர்கிறார்கள், யாரெல்லாம் புலம்பெயர்கிறார்கள், எந்த காரணங்களால் புலம்பெயர்கிறார்கள் என்ற புரிதல் எனக்குள்ளது. இவர்கள் தங்களின் உடல் வலிமையை விட அதிகமாக வேலை செய்கிறார்கள்.
அரசாங்க உதவியை அதிகமாக நம்பியுள்ளவர்கள் கைவிடப்பட்டுள்ளது தற்போது ‘புதிய இயல்பாக’ மாறியுள்ளது. உணவு, தண்ணீர், போக்குவரத்து எதுவுமில்லாமல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடக்க தள்ளப்பட்டுள்ளார்கள், அதுவும் காலில் செருப்பு இல்லாமல்.
இது எனக்கு கடும் வேதனையை தருகிறது. ஏனென்றால் இங்குள்ள மக்களிடம் எனக்கு உணர்வுரீதியான நெருக்கம் உள்ளது, நானும் அவர்களில் ஒருவனே. என்னைப் பொருத்தவரை அவர்கள் என்னுடைய மக்கள். இதே மக்கள், இதே சமூகம் மற்றுமொரு பேரிடியை சந்திப்பதை பார்த்தும் எந்த உதவியும் செய்ய முடியாமல் தொந்தரவுக்கு உள்ளாகிறேன். இதுவே என்னை கவிதை – நான் கவிஞன் அல்ல - எழுத தூண்டியது




