சுபாரி புட்டல் ஒரு தசாப்த காலமாக அவரால் நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவிற்கு அதிகமான நாட்கள் மருத்துவமனையில் இருந்திருக்கிறார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட தனது 17 வயது மகனின் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார். பிறகு சிறிது நாள் அவரது கணவர் சுரேஷ்வராவிற்காக மும்பை சென்று வந்தார்.
அவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டில் நான்கு மாத கால இடைவெளியில் இறந்துவிட்டனர் அது சுபாரியை துக்கத்தில் ஆழ்த்தியது.
அவரது கணவர் சுரேஷ்வராவின் வயது வெறும் 44 தான். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரும் சுபாரியும் தங்களது சொந்த ஊரான ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தில் இருந்து 1,400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மும்பை நகரத்திற்கு புலம்பெயர்ந்தனர். உள்ளூர் வேலை தரகர் அவர்களை ஒரு கட்டுமான வேலைக்கு எடுத்துக் கொண்டார். "நாங்கள் எங்களது கடனை திருப்பி செலுத்தவும் எங்களது வீட்டை கட்டி முடிப்பதற்கும் பணம் சம்பாதிப்பதற்காக நாங்கள் சென்றோம்", என்று சுபாரி கூறினார். இருவரும் இணைந்து நாளொன்றுக்கு 600 ரூபாய் சம்பாதித்தனர்.
"ஒரு நாள் மாலை வேளை பணிபுரிந்து கொண்டிருக்கும் போதே அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது", என்று 43 வயதாகும் சுபாரி ஹியாலில் உள்ள தனது மண் வீட்டின் முன்னால் தரையில் அமர்ந்தபடி கூறினார், துரேகேலா வட்டத்திலுள்ள ஹியால் கிராமத்தில் 933 மக்கள் வசித்து வருகின்றனர். அவரது குடும்பம் மாலி சமூகத்தைச் சேர்ந்தது.
கட்டுமான மேற்பார்வையாளரும் சுபாரியும் சுரேஷ்வராவும் ஆட்டோ ரிக்ஷா மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் நகரின் சுற்று வட்டாரத்தில் உள்ள மூன்று மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர், இறுதியாக வடமத்திய மும்பையில் உள்ள சீயோனில் உள்ள லோக்மான்ய திலக் நகராட்சி பொது மருத்துவமனையை அடைந்தனர்.
"அந்த நேரத்தில் எங்களிடம் ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்கள் இல்லாததால் ஒவ்வொரு மருத்துவமனையும் எங்களை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி கொண்டே இருந்தது", என்று சுபாரி கூறுகிறார். "அவருக்கு மஞ்சள் காமாலைக்கான அறிகுறிகள் இருந்தன. இடுப்புக்கு கீழே அவரது உடல் செயலிழந்து போனது அதனால் அவரது பாதத்தை நான் தடவிக்கொண்டே இருந்தேன்", அவருக்கு என்ன நோய் என்பதை அவருக்கு தெரியவில்லை. மறு நாள் நவம்பர் 6ஆம் தேதி 2019 ஆம் வருடம் சுரேஷ்வரா அதே மருத்துவமனையில் இறந்துவிட்டார்.








