முறையாக வேலைகள் முடிக்கப்படாத மண் பாதைகள் பல கீலோ மீட்டர்கள் நீண்டு செல்கின்றன. இதில் பயணம் செய்து சவுராவில் உள்ள மருத்துவமனைக்கு செல்வது பெரும் போராட்டமாக உள்ளது. முபீனா மற்றம் அர்ஷித் ஹீசேன் அக்கூன், இருவரும் அவர்கள் மகனின் மருந்துவ பரிசோதனைகளுக்காக மாதத்தில் ஒருமுறையாவது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். ரக்கீர்த் மறுகுடியமர்வு காலனியில் சாக்கடை வழிந்தோடும் பாதைகளிலும், பனி உருகியோடும் இடங்களிலும் தங்கள் 9 வயது மகனை தூக்கி சுமந்துகொண்டு செல்ல வேண்டும்.
2 முதல் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்த பின்னர்தான் அவர்களுக்கு ஆட்டோ கிடைக்கும். 10 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு ஸ்ரீநகரில் உள்ள சவுரா ஷேர் ஐ காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையம் வந்து சேர்வதற்கு அவர்களுக்கு ரூ.500 செலவாகும். சில நேரங்களில் அவர்கள் முழு தொலைவும் நடந்த வரவேண்டியிருக்கும். கடந்தாண்டு ஊரடங்கின்போது மருத்துவமனைக்கு அவர்கள் இவ்வாறு நடந்துதான் வந்தார்கள். “அதற்கு ஒரு நாள் ஆகிவிடும்“ என்று முபீனா கூறுகிறார்.
முபீனா மற்றும் அர்ஷித்தின் உலகம் மாறி 9 ஆண்டுகள் ஆனது. 2012ம் ஆண்டு அவருக்கு காய்ச்சலும், மஞ்சள் காமாலையும் ஏற்பட்டபோது, மூபின் பிறந்து சில நாட்களே ஆகியிருந்தது. அவருக்கு ரத்தத்தில் அதிகளவு பில்ருபீன் இருந்தது. அதனால், அவரை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் மாநில அரசின் ஜிபி பான்ட் மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் தங்கி சிகிச்சையெடுத்துக்கொண்டார். இறுதியில், அவர்களின் குழந்தை இயல்பான குழந்தை இல்லை என்று அவர்கள் கூறிவிட்டார்கள்.
“அவரது நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், நாங்கள் அவரை தனியார் மருத்துவரிடம் காண்பித்தோம். அவர் எங்களிடம் குழந்தையின் மூளை முற்றிலும் சிதைந்துவிட்டது. அவரால் இனி உட்காரவும், நடக்கவும் முடியாது என்று கூறிவிட்டனர்“ என்று முபீனா கூறுகிறார். அவருக்கு 30 வயதாகிறது.
கடைசியில் மோஷினுக்கு மூளை முடக்குவாதம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது முதல், அவரது தாய் முபீனா, தனது மகனுடனே பெரும்பாலான நேரத்தை கழிக்கிறார். அவரை பராமரிப்பது ஒன்றே அவரின் வேலையாகிவிட்டது. “நான் தான் அவர் சிறுநீர் கழித்துவிட்டால் சுத்தம் செய்ய வேண்டும். அவரது படுக்கையை சுத்தம் செய்ய வேண்டும். அவரது ஆடைகளை துவைக்க வேண்டும். அவரை அமர வைக்க வேண்டும். அவர் நாள் முழுவதும் எனது மடியிலேயே இருப்பார்“ என்று அவர் கூறுகிறார்.










