தாம்தாரி மாவட்டம் நாக்ரி தாலுகாவில் சாலையின் ஓரத்தில், 10 பேர் கொண்ட ஒரு குழு ஏதோ செய்துகொண்டிருந்தது. அங்கிருந்து வந்த சலசலப்பை அடுத்து, நான் நின்று, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக நான், அவர்களை நோக்கி சென்றேன்.
அங்குள்ள உள்ளூர் அரசு மருத்துவமனையின் மேற்கூரையில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து தேனைப்பிரித்தெடுத்து அவற்றை அங்கு சில இளைஞர்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். அம்மருத்துவமனை நிர்வாகத்தினர் அந்த தேன்கூட்டை அகற்றித்தருமாறு அவர்களிடம் கேட்டிருந்தார்கள்.
நான் அவர்களிடம் எங்கிருந்து வருகிறார்கள் என்று கேட்டேன். “மேற்கு வங்கத்தில் உள்ள கொல்கத்தா“ என்று ஆதாரத்துடன் சைபால் கூறினார். நான் கொல்கத்தா நகரில் இருந்தா என்று மீண்டும் கேட்டேன்? “உங்களுக்கு சுந்தர்பன்ஸ் தெரியுமா? என்று அவர் என்னிடம் கேட்டார். தெரியும் என்று நான் கூறினேன். இங்கு தேன் சேகரித்துவிட்டு அவர்களால் சுந்தர்பன்சுக்கு திரும்பி செல்ல முடியுமா என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

