இந்தக் குழு, கிராமப்புறப் பெண்கள் செய்யும் பெரிய அளவிலான பணிகளைச் சித்தரிக்கும் புலப்படும் பணியும், புலப்படாத பெண்களும் என்ற புகைப்படக் கண்காட்சியின் ஒரு பகுதியாகும். அனைத்து புகைப்படங்களும் 1993 மற்றும் 2002 க்கு இடையில் 10 இந்திய மாநிலங்களில் P. சாய்நாத்தால் படமாக்கப்பட்டவை. PARI, பல ஆண்டுகளாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து உருவாக்கிய புகைப்படக் கண்காட்சியை இங்கு ஆக்கப்பூர்வமாக டிஜிட்டல்மயமாக்கியுள்ளது.
வாழ்நாள் முழுதும் வளைந்தே பணிகள்
விஜயநகரத்தின் மதியவேளை சூரிய ஒளியில் பணிசெய்துகொண்டிருக்கும் அந்தப்பெண், பணியை இடையில் நிறுத்திவிட்டு உற்சாகமாகிறார். ஆனால் குனிந்து வேலை செய்யும் அதே நிலையில் இருந்துகொண்டு, அவர் நன்றாக பழகிய அந்த வேலையை சில நிமிடங்களில் மீண்டும் குனிந்த அதே நிலையில் தொடர வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.
அவரது கிராமத்தைச் சேர்ந்து வேறு இரு பெண்கள் குழுக்களுடன் இணைந்து அதே முந்திரி வயல்களில் அவர் வேலை செய்துகொண்டிருக்கிறார். வயலுக்கு அவர்களுக்கு தேவையான மதிய உணவு, தண்ணீர் ஆகியவற்றை ஒருவர் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்து வருகிறார். மற்றொருவர் அவருக்கு தலைகீழாக தெரியுமளவு குனிந்து வேலை செய்கிறார். அனைவரும் குனிந்து வேலை செய்பவர்கள்.
ஒரிசாவில் உள்ள ராயகாடாவில், ஆண்களும் வயலில் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அது கேமராவின் கண்கள் (லென்ஸ்) வழியாக பார்க்கும்போது கண்ணை கவர்வதாக உள்ளது. ஆண்கள் அனைவரும் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஒடிஷாவில் உள்ள நுபடாவில் அனைத்து பெண்களும் குனிந்து வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். விதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்களை மழை கூட தடுக்கவில்லை. பெண்கள் இடுப்பை வளைத்து குனிந்து குடையின் கீழ் நின்று பணி செய்கிறார்கள்.








