1998ஆம் ஆண்டு வெளிவந்த ஏ பக்’ஸ் லைஃப் எனும் ஹாலிவுட் வெற்றிப் படத்தில், எறும்புத் தீவில் வெட்டுக்கிளிகள் போன்ற எதிரிகளிடம் இருந்து தனது உறவினர்களை காக்க, ஃபிளிக் எனும் எறும்பு மாவீரர்களை தேர்வு செய்ய முயற்சிக்கிறது.
நிஜ வாழ்க்கையில் எடுத்துக் கொண்டால், இந்தியாவின் ஒரு லட்சம் கோடி உயிர்களில் 130 கோடி பேர் மனிதர்கள். இந்தாண்டு இந்தியாவிற்கு கோடிக்கணக்கான சிறுகொம்பு வெட்டுக்கிளிகள் படையெடுத்தன. அவை பீகார், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் உள்ள பயிர்களை அழித்துவிட்டதாகச் சொல்கிறார் மத்திய அரசின் வேளாண்மை ஆணையர்.
இதுபோன்ற வான்வெளி படையெடுப்பாளர்களுக்கு தேசிய எல்லைகள் கிடையாது. 30 நாடுகள், 160 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கடந்து மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்துள்ளதாக ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) சொல்கிறது. வெட்டுக்கிளிகளின் சிறிய திரள் – 1 சதுர கிலோமீட்டருக்கு 4 கோடி உறுப்பினர்களை கொண்டது - 35,000 மனிதர்கள், 20 ஒட்டகங்கள் அல்லது ஆறு யானைகள் ஒரு நாளில் சாப்பிடக் கூடிய அளவிற்கு உண்பவை.
அவற்றைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு, வேளாண்மை, உள்துறை, அறிவியல் தொழில்நுட்பம், விமான போக்குவரத்து, தொலைதொடர்பு அமைச்சகங்களிடம் இருந்து உறுப்பினர்களை தேசிய வெட்டுக்கிளி எச்சரிக்கை நிறுவனம் கோரியதில் வியப்பேதும் இல்லை.
இக்கட்டுரையில் வெட்டுக்கிளிகள் வில்லன்கள் மட்டுமல்ல, லட்சக்கணக்கான பூச்சிகளின் சமநிலையை பாதித்து, அவற்றை ஆபத்திற்குள் தள்ளியிருக்கின்றன. இந்தியாவில், பூச்சியியல் வல்லுநர்கள், பழங்குடியினர், விவசாயிகள் அவற்றைப் பட்டியிலிடும்போது, அவற்றில் பல வகைகள் உண்டு, சில நேரங்களில் புதிய வகைகளும் இருக்கும் என்கின்றனர். நல்ல தோழர்கள் - உணவு உற்பத்திக்கு ‘நன்மை பயக்கும் பூச்சிகள்’- வாழ்விடம் பருவநிலை மாற்றத்தால் பிளவுபடும்போது தீமை செய்யும் பூச்சிகளாக மாறிவிடுகின்றன.










