பஹேராவில் புலம்பெயர்வு அதிகமாக உள்ளது மேலும் பலர் கட்டுமான தளங்களில் வேலைக்குச் செல்கின்றனர். இக்குடும்பத்திற்கு அங்கு ஒரு ஏக்கருக்கும் குறைவான - ஒரு சிறிய விவசாய நிலம் உள்ளது. "நாங்கள் மற்றவர்களின் நிலத்தில் வேலை செய்யும் போது நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் தான் கிடைக்கும்", என்கிறார் நீரா. நிலம் குத்தகைக்கு விடப்படும், குத்தகைதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் 10 - 20 சாக்கு நெல் அல்லது கோதுமையை உரிமையாளர்களுக்கு வழங்குகின்றனர் அது எவ்வளவு நன்றாக விளைந்திருக்கிறது என்பதைப் பொருத்தது. லக்னோவில் கிட்டத்தட்ட 4 வருட உழைப்பு அவர்களின் கிராமத்தில் மூன்று கான்கிரீட் அறைகளை கட்டுவதற்கான பணத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கிறது. அடுத்து ஒரு கழிப்பறையை கட்டி, அனைத்து சுவர்களையும் பூச வேண்டியிருக்கிறது.
தினமும் ஏழரை மணி நேரம் அவர்கள் செய்யும் முக்கியமான வேலைக்காக சங்கீதா மற்றும் நீராவுக்கு தலா 350 ரூபாய் - கூலித் தொழிலாளர்களுக்கு சமமான சம்பளம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு விடுமுறை நாட்கள் கிடையாது, அவர்கள் ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டால் அதற்கு ஊதியம் கிடைக்காது. சங்கீதாவின் தந்தை சாலிகிராம் அதே இடத்தில் கொத்தனாராக பணிபுரிந்து 550 ரூபாய் சம்பாதிக்கிறார். ஷ்யாமு தொழிலாளிக்கும் கொத்தனாருக்கும் இடையில் ஏதோ ஒரு வேலை செய்து 400 ரூபாய் சம்பாதிக்கிறார். இளைய சகோதரி ஆர்த்தி அவர்களது வீட்டு உரிமையாளரிடம் சமையல் வேலை செய்து மாதம் 600 ரூபாய் சம்பாதித்து வருகிறார். இக்குடும்பத்தின் ஐந்து பேரின் சம்பளத்தையும் வைத்து மாதமொன்றுக்கு சுமார் 10,000 ரூபாய் சேமிப்பதாக் கூறுகின்றனர்.
இங்குள்ள பெரும்பாலான கட்டுமான தளங்களில் பெண்கள் 50 கிலோ எடையுள்ள சிமெண்ட் மற்றும் கான்கிரீட் கலவையை முதுகு மற்றும் தலையில் சுமந்து கொண்டு கூலி வேலை செய்து வருகின்றனர். சங்கீதாவின் மூத்த சகோதரி சந்தோஷி விதிவிலக்காக இருந்தார். அவரது பொறுமையும், கூர்மையான கண்களும் அன்சாருதீனை அவரை ஒரு மறுசீரமைப்பவராக பயிற்றுவிக்கத் தூண்டியது. "அவர் கிட்டத்தட்ட 70% கொத்தனார், ஆனால் பிறகு அவர் திருமணமாகி சென்றுவிட்டார்", என்று அவர் கூறுகிறார். சந்தோஷி இப்போது புனேவில் தனது கணவருடன் ஒரு சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார், அவர் ஒரு கொத்தனாராக மாறவில்லை.
அன்சாருதீன், சந்தோஷின் இழப்பை சமாளிக்க சாலிகிராமமை மறுசீரமைப்பவராக பயிற்சி பெறச் செய்தார். "அதன் மூலம் அவர் மறுசீரமைப்பு தளங்களில் வேலை தேடும்போது, சங்கீதாவின் திறமைகள் சிறப்பாக பயன்படுத்தப்படும்". தனது 20 வருட வேலையில் இவரைப்போன்ற இயற்கையாகவே திறமைவாய்ந்த எவரையும் அவர் சந்திக்கவில்லை என்றும் அவர் நம்புகிறார். ஆனால் சாலிகிராம் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை, அதனால் சங்கீதாவின் எதிர்காலம்,
சங்கீதாவின் உயர்ந்த திறமைகள் உடல் அசௌகரியத்தால் வேலையினை சிறிதும் குறைக்காது. "என் கண்களும், தோள்களும் வலிக்கின்றன. பெரும்பாலான நாட்களில் நான் ஒரு பேய் போல் காட்சி அளிக்கிறேன்", என்று அவர் தனது ஆடையில் படிந்திருக்கும் பெயிண்ட் மற்றும் சிமெண்ட் தூசியை குறிப்பிட்டுக் கூறுகிறார். அவருடைய நாள் காலை 6 மணிக்கு துவங்குகிறது அவருடைய முதல் பணி அவரது வீட்டிற்கு 20 அடி தொலைவிலிருக்கும் அடி பம்பிலிருந்து 15 - 20 வாளிகள் தண்ணீரை எடுத்து வருவதாகும். பிறகு அவர் துணி துவைத்து விட்டு குளிக்கிறார், ஆர்த்தி காலை மற்றும் மதிய உணவை சமைக்கிறார். வேலைக்கு பிறகு மீண்டும் அவர் 4 - 5 வாளி தண்ணீர் எடுத்து இரவு உணவு சமைக்க பயன்படுத்துகிறார் - நூடுல்ஸ், கோழி மற்றும் மீன் ஆகியவை அவருக்கு பிடித்தமான உணவு வகைகள். குடும்பத்தில் உள்ள ஆண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே செல்கின்றனர் அல்லது ஓய்வெடுக்கின்றனர். ஷ்யாமு ஒரு முறை உணவு தயாரிப்பவரிடம் வேலை பார்த்திருக்கிறார், மேலும் சில நேரங்களில் அவர் ஏதாவது ஒரு உணவை சமைக்கிறார். ஆனால் அது பெரும்பாலும் "அவருக்கு மட்டுமாகத்தான் இருக்கும்", என்று சங்கீதா கூறுகிறார். இச்சகோதரிகள் அதை கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்ததே இல்லை.