கோதியில் ஒரு தெருவில் இரண்டு பெண்கள் பெரிய கல்லின் மீது கல் துண்டுகளை வைத்து கவ்வியால் கீழே பிடித்துக்கொண்டு சுத்தியலால் அடிக்கின்றனர். கல் உடைந்து நொறுங்குகிறது. அவர்களது கை கால் மற்றும் முகம் தூசியால் சாம்பல் நிறமாக இருக்கிறது. அவர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணிந்து கொள்வதில்லை. சில நேரங்களில் சின்னஞ்சிறு கற்கள் எங்களது கண்களில் படும் நாங்கள் மருத்துவமனைக்கு (ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தார்சுலாவில் இருக்கிறது) செல்கிறோம். சில நேரங்களில் எங்களது விரல்கள் காயப்படும். ஆனால் அவ்வளவுதான் என்கிறார் 65 வயதாகும் பாதுலி தேவி. இப்போதும் மதியாமாகிறது மேலும் அவர் ஒரு சாக்கு நிறைய கற்களை சேகரித்திருக்கிறார். சூரியன் மறையும் வரை வேலை செய்வேன் என்று அவர் கூறுகிறார்.
கற்களுக்கான தேவை அதிகரித்திருப்பது மட்டுமின்றி கை நெசவு பொருட்களுக்கான தேவை குறைந்துவிட்டதால் கோதியில் உள்ள பெண்களுக்கு கல் உடைப்பது முழு நேரத் தொழிலாகிவிட்டது. இங்குள்ள பெரும்பாலான பெண்கள் போடியா பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் சிறந்த நெசவுத் திறமைக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் எதை வேண்டுமானாலும் நெய்வார்கள், பாயிலிருந்து கம்பளம் வரை ஸ்வெட்டரிலிருந்து சாக்ஸ் வரை, இவை அனைத்தும் அப்பகுதியில் இருக்கக்கூடிய செம்மறி ஆடுகளிலிடமிருந்து பெறப்படும் ரோமத்திலிருந்து செய்யப்படுகிறது. போடியா பெண்கள் மிகவும் ரசிப்பது நெசவு செய்வதைத்தான். இப்படித்தான் அவர்கள் வருமானம் ஈட்டி வந்தனர். அவர்களது கைவினை அவர்களுக்கு மரியாதையை பெற்றுத்தந்தது. ஆனால் அது ஒரு காலம் என்று நினைவு கூர்கிறார் பாதுலி தேவி.
இப்போது மரத்தறிகள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது அல்லது சேதம் அடைந்திருக்கிறது அவற்றை மீண்டும் உருவாக்க வேண்டியிருக்கிறது, பல வீடுகளில் ஒரு மூலையில் தூசி படிந்து கிடக்கிறது. வெள்ளத்திலிருந்து தப்பிய சில தறிகள் நூறு ஆண்டுகள் பழமையானவை, தாய்மார்களால் அவர்களது மகள்கள் மற்றும் மருமகள்களுக்கு விலைமதிப்பற்ற அன்பளிப்பாக காலங்காலமாக கொடுக்கப்பட்டு வந்தது. நெசவுக் கலையும் பல தலைமுறைகளாக சொல்லித்தரப்பட்டது. "வேறு எதுவும் தெரியவில்லை என்றாலும், ஒரு போடியா பெண்ணுக்கு நெசவு செய்வது எப்படி என்றும் (கோதுமையில் இருந்து) மது தயாரிப்பது எப்படி என்றும் தெரிந்திருக்கும்", என்று 52 வயதாகும் கிஸ்மதி தேவி. கூறுகிறார்.