இசைக்குழுவின் கட்டணம் நாளொன்றுக்கு ரூ.10 ஆயிரம் மூதல் ரூ.15 ஆயிரம் வரை உள்ளது. அவர்களுக்கு திருமணம் அதிகம் நடைபெறும் மாதங்களில் 10 நிகழ்ச்சிகள் வரை கிடைக்கும். அந்த மாதங்களில் அவர்கள் ஒன்றரை லட்ச ரூபாய் வரை பெறுகிறார்கள். “கட்டணத்தில் நாங்கள் மிகவும் கண்டிப்பாக நடப்பதை விட பேச்சுவார்தை மூலம் முடிக்கிறோம்“ என்று சவிதா கூறுகிறார். ஆனால், எங்களை எங்கள் கிராமத்தில் இருந்து பாதுகாப்பாக வாகனத்தில் அழைத்துச்சென்றுவிட்டு, திரும்ப அழைத்து வந்துவிடவேண்டும் மற்றும் இரவில் தங்க வேண்டிய நிலை இருந்தால் சிறப்பான தங்கும் வசதிகள் செய்து தரவேண்டும் என்பதில் நாங்கள் கண்டிப்புடன் நடந்துகொள்வோம்.
முன்னர் இருந்த கூலியுடன் ஒப்பிடும்போது, அவர்களின் நிலை இப்போது எப்படி உள்ளது? இந்த மாநிலத்தில் ஊரக வேலை உறுதித்திட்டக்கூலி ரூ.168. எப்போதாவது கிடைக்கும் கூலி வேலைக்கு, திறனில்லாத தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச கூலி, அவர்கள் இசைக்குழுவை துவக்கியபோது, 200 ரூபாய்க்கும் குறைவு, இவர்கள் 2012ல் நாளொன்றுக்கு ரூ.100க்கும் அதிகமாக கூலி பெற்றதே இல்லை.
இந்த பொருளாதார சுதந்திரம், கிராமத்தில் இவர்களுக்கு நல்ல மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்தது. (மற்ற பெரும்பாலான பெண்கள், தாங்களும் இசைக்குழுவில் கலந்துகொள்ளலாமா என்று கேட்குமளவிற்கு அவர்களுக்கான செல்வாக்கு அதிகரித்திருந்தது). ஆனால், அது அவர்களின் சமூக பொறுப்பை குலைக்கவில்லை. தவறான கணவர் முதல் வரதட்சனை கேட்பவர்கள் வரை, அவர்கள் எதிர்கொள்கிறார்கள். அவர்கள் திர்பா மற்றும் சுற்றியுள்ள கிராமங்ளுக்கு ஆலோசகர்கள் மற்றும் நடுவர்களாகவும் மாறியுள்ளார்கள். அவர்கள் தாங்கள் தலையிட்ட வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறியுள்ளனர். ஆனால் யாரின் பெயரையும் குறிப்பிட மாட்டார்கள்.