ஏலியன்கள் போன்ற தோற்றத்துடன், அவர்கள் முழு பிபிஇ உடையுடன் தெற்கு 24 பார்கனாசில் உள்ள அவரது ஊரில் வந்து இறங்குவார்கள். “என்னை ஒரு விலங்கைப்போல் பிடிப்பதற்கு வருவார்கள்“ என்று ஹரன்சந்ர தாஸ் கூறினார். அவரது நண்பர்கள் அவரை ஹரு என்று அழைக்கிறார்கள். இனி அவர்களை நண்பர்களாக தாஸ் கருதவில்லை. ஏனெனில் மருத்துவமனை ஊழியர் என்பதால், அவர்கள் அவரை அண்மையில் புறக்கணித்தார்கள். மக்கள் எனது வீட்டிற்கு பால் ஊற்றுவது மற்றும் மளிகை பொருட்கள் கொடுப்பது ஆகியவற்றை நிறுத்திவிட்டார்கள். நாங்கள் பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்பட்டோம். தூக்கமில்லாமல் பல இரவுகளை கழித்தோம். எங்கள் வீடுகளின் அருகில் வசித்தவர்கள் எங்களை பார்த்து பயந்தார்கள். “இத்தனைக்கும் ஹரன்சந்ரா கோவிட் – 19 தால் பாதிக்கப்படக்கூடவில்லை“
அவரது குற்றம், அவர் ஒரு மருத்துவமனையில் வேலை செய்தார். பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் இதேபோன்ற பிரச்னைகளை சந்தித்தார்கள். மாவட்ட அளவிலான சுகாதார ஊழியர்கள் அவரை அழைத்துச் செல்ல வந்தது கூட அவருக்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தோடுதான்.
“எல்லோரும் என்னைப்பார்த்து அஞ்சியதற்கு காரணம், நான் மருத்துவமனை ஊழியர் என்பதால், எனக்கு தொற்று இருக்கலாம் என்று எண்ணிதான்“ என்று அவர் கூறுகிறார்.
ஹரன்சந்ரா, 30 வயதுகளின் மத்தியில் உள்ளார். கல்கத்தாவில் உள்ள குழந்தைகள் சுகாதார மைய மருத்துவமனை பராமரிப்பு அறையில் பணிபுரிகிறார். ஒரு அறக்கட்டளை நடத்தும் லாப நோக்கற்ற மருத்துவமனை, இதில் கொல்கத்தா நகரை தவிர கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் சேவையளித்து வருகிறது. பார்க் சர்க்கஸ் பகுதியில் உள்ள இந்த 220 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வருவார்கள். 1956ம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் குழந்தைகள் மையம். வேறு எங்கும் கிடைக்காத தரமான மருத்துவ சிகிச்சைகள் இங்கு வழங்கப்படுகிறது.
கோவிட் – 19 மற்றும் ஊரடங்கால் அவர்கள் இந்த மருத்துவமனைக்கு வருவது கூட கடினமாக இருந்தது. “இங்கு வருவது கூட பிரச்னையாக இருந்தது“ என்று ரத்தன் பிஸ்வாஸ் கூறுகிறார். அவர் அப்போதுதான் தெற்கு பார்கனாசில் இருந்து வந்திருந்தார். “நான் வெற்றிலை வயலில் தினக்கூலியாக பணிபுரிகிறேன்“ அம்பன் (மே 20ம் தேதி தாக்கிய புயல்) அந்த வயலை அழித்துவிட்டது. நான் எனது வருமானத்தின் ஆதாரத்தை இழந்துவிட்டேன். தற்போது எனது இளைய குழந்தைக்கு காதில் தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் அவரை இங்கே கொண்டு வந்துள்ளோம். ரயில் சேவைகள் இல்லாதாதால், மருத்துவமனைக்கு வருவது மிகக்கடினமாக இருந்தது“ என்கிறார். தாஸ் போன்றவர்கள் இரண்டு, மூன்று பேருந்துகளில் ஏறி, ரிக்ஷாவில் வந்து, குறிப்பிட்ட தூரம் நடந்து என்று பயணங்கள் மேற்கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர்.
நிறைய பிரச்னைகள் வரும் என்று அம்மருத்துவமனை மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.




















