அவர்கள் சூரியன் எழுவதற்கு முன்னால் எழுகிறார்கள். நாள் முழுதும் வேலை செய்கிறார்கள். அவர்களின் வீடுகளில், அவர்களின் வயல்களில், அவர்களுடைய குழந்தைகளையும் குடும்பங்களில் இருக்கின்ற ஆண்களையும் பராமரிப்பதற்காக, அவர்களின் ஆடுகள், மாடுகள், கோழிகளை பராமரிப்பதற்காக, அவர்கள் நாள் முழுவதும் வேலை செய்கிறார்கள். அதுவும் அவர்கள் இமயமலையின் உச்சியில் சரளைக் கற்கள் நிறைந்த மலைப்பாதைகளில் இதனை செய்கிறார்கள். அவர்களுடைய முதுகுகளில் கனமான சுமைகளை ஏற்றிக் கொண்டு இந்தப் பணிகளைச் செய்கிறார்கள். உற்பத்திப் பொருட்களையும் தீவனங்களையும் முதுகுகளில் தூக்கிக் கொண்டு அவர்கள் இதைச் செய்கிறார்கள். இமாச்சல் பிரதேசத்தின் பஹாரி சமூகப் பெண்கள்தான் அவர்கள். அவர்களைச் சந்தியுங்கள்.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் சுபத்ரா தாகூர் அவரது சமையலறைக்கு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தார். சுவர்கள் எல்லாம் நீல நிறம். ரப்பர் கையுறைகளை அணிந்து கொண்டு அவர் வெள்ளை வண்ணத்தை பூசிக் கொண்டு இருந்தார். சமையல் முடிந்து விட்டது. காலை 11.30 மணி ஆகிவிட்டது, சின்ன இடைவேளை எடுத்துக்கொள்வோம் என்பதற்காக அவர் வீட்டுக்கு வெளியில் காலடி வைத்தார். அவரைப் பார்ப்பதற்காக பேரக் குழந்தைகள் வந்திருந்தார்கள். வெயிலில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு புன்னகையோடு அவர்களை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தக் கோடையில் முழுநாளும் அவருடைய குடும்பத்தின் வயல்களில் அவர் செலவிடுவார். ஆனால், குளிர் காலம் வருகிறது. குளிர்காலத்தின் வருகையோடு சின்ன ஓய்வு .....











