இந்தியாவில் பத்தாண்டுகளில் பள்ளிச் சேரும் பிள்ளைகளின் எண்ணிக்கை 300 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. ஆனால் கல்வித் தரமாக உள்ளதா? ஆண்டுதோறும் ஜனவரி மாதம் குடிமக்கள் அறிக்கை அட்டையில், (ASER அல்லது வருடாந்திர கல்வி நிலை அறிக்கை) பள்ளிகளில் பிள்ளைகளுக்கு என்ன கற்பிக்கப்படுகிறது- அவர்களால் அடிப்படையான சொற்களை, எண்களை படித்து புரிந்துகொள்ள முடிகிறதா என்று கண்டறிந்து தெரிவிக்கப்படுகிறது
அறிக்கையின் தரமான கண்டுபிடிப்புகள் அரசின் வெற்று புள்ளிவிவரங்களை வெட்ட வெளிச்சம் ஆக்குகிறது. ASER அனைத்து பள்ளி செல்லும் குழந்தைகளையும் அடிப்படை கற்றல் நிலைகளுக்கு சோதிக்கிறது. அவர்களால் பாடங்களைப் படிக்க முடிகிறதா, 2ஆம் வகுப்பின் கணித கேள்விகளுக்கு தீர்வு காண முடிகிறதா என்று பார்க்கிறது. உதாரணமாக, 2008 ஆம் ஆண்டில், 44 சதவீத பள்ளி மாணவர்களால் அடிப்படை கழித்தல், வகுத்தல் கொண்ட 2ஆம் வகுப்பு கணித கேள்விகளை தீர்க்க முடியவில்லை என்று கண்டறிந்தது.
பிரதம் என்ற அரசு சாரா அமைப்பால் முன்னெடுக்கப்படும் இந்த மூன்று மாத கால முயற்சியில், மாணவர்கள், விஞ்ஞானிகள் முதல் முதலீட்டு வங்கியாளர்கள், ஊறுகாய் தயாரிப்பாளர்கள் வரை 30,000 க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள தன்னார்வலர்களை ஒன்றிணைக்கிறது. இவர்கள் இந்தியாவின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் குழந்தைகளை சோதிக்கவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை பார்க்கவும் செல்கின்றனர். இந்த ஆண்டு 3 லட்சம் வீடுகளில் 7 லட்சம் குழந்தைகள் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.






