உத்தராகண்ட் மாநில மலை மாவட்டங்களில் பிப்ரவரி 15ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் மார்ச் 11ஆம் தேதி வெளியாகும்.
"குரங்குகளின் தொல்லைகள் தொடர்வதால் எங்கள் வாழ்க்கை சீரழிந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்கு கேட்க மட்டும் எங்களிடம் வருகின்றன. நாங்கள் வாக்களிக்காவிட்டால், 'நீங்கள் வாக்களிக்கவில்லை, எனவே எங்களிடம் புகாரும் கூறாதீர்கள்,'” என்று சொல்வதாக புரான் லால் சிங் தெரிவிக்கிறார்.
அல்மோரா மாவட்டத்தின் சோமேஸ்வர் வட்டத்தில் உள்ள ஜல் தவுலர் கிராமத்தில் பிரகாசமான பிப்ரவரி காலை வேளையில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளின் தேர்தல் பேரணிகள் அரை கிலோமீட்டர் தொலைவில் அடுத்தடுத்து நடந்தபோதும் அவை, புரான் லால் மற்றும் அவரது மனைவி நந்தி தேவி ஆகியோரிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இருவரும் தங்கள் வேலைகளை தொடர்ந்தனர்.








