நிலஞ்சனா நந்தி டெல்லியைச் சேர்ந்த ஒரு கட்புலக் கலைஞர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் பல கலை கண்காட்சிகளில் பங்கேற்றுள்ளார். ஃபிரான்சின் பாண்ட்-அவென் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டிலிருந்து உதவித்தொகையைப் பெற்றுள்ளார். பரோடா மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் நுண்கலை ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இங்கு இடம் பெற்றுள்ள புகைப்படங்கள் ராஜஸ்தானில் 'சமநிலை' என்ற கலை நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டவை.