सकाळच्या पहरी कोण गोसावी गं दारी आला
काई सांगु बाई तुला वाढवी कशा गं भिकशा तू गं त्याला
असा सकाळच्या पारी धर्म चांगुणानी केला
धर्म चांगुणानी केला, अंगी देव तो गं राबवीला
असा धर्माचा डावू जिला येतो ना गं तिनी केला
नको म्हणू नासविला, देव उभा तो गं राहिला
हाच धर्माचा डावू कोण घालीतं गं पंगयती
काय म्हणं नासविला, पांडुरंग तो गं रंगतो संगयती
जिच्या कुळीला धर्म चा धर्म, तिच्या लेकीनी चालू केला
गेली लांब वनामधी देव तिथं, तिला साह्य झाला
पाची बोटाचा गं धर्म करी जिवाची सोडवणं
अशी वार्याच्या झगरीनी, कशी उडाली कवळी पानं
असा धर्माचा डावू देते केळीच्या पानावरी
काई यातं मिळाईला भुकेल्याची जाणं करी
आला माझ्या दारामधी देते प्यायला नितं पाणी
येम गेला फिरवूनी भुकेल्याची जाणं करी
असा धर्माचा डावू माझा मला तो गं मिळईला
गेली व्हती देऊळाला सारासारा तो गं कळईला
आस दुबळं-माझं-पण मला कुणी ते गं हिणविलं
देवाला ना जोडी हात, कसं शर्थीनी चालविलं
दुबळं-ना-माझं-पणं मारी वस्ताराला गाठी
किती नाव संभाळीला, सभा घेतल्याना माझ्या गोठी
असा दुबळ्यापणाला नको भाऊ तू रे डगमगू
असा निघूनी जाईल चंद्रावरीला रे काळा ढगू
आस दुबळ्यापणाला नको होऊस रे आयाहुया
आस निघूनी जाईल चंद्रावरली रे काळी साया
अशी दुबळ्यापणाईची कसा करतो हेळयणा
दुपारची सावली आला काखत रे झोळयणा
अशी दुबळ्यापणाईची कोण करीतो टिंगईल
तुझ्या मरणाच्या वेळी सारं काही तो सांगईल
दुबळ्यापणाईला काही बोलावरं तोडून
जाई मोगर्याची कळा गेली वार्यानी रे पडूनी
पूर्वी जलमाच्या किर्ती गेल्या जगात पांगून
नको मज लाडवू देते तुम्हांला रे सांगून
அதிகாலையில் வீட்டுக்கு வரும் இந்த கொசாவி யார்?
என்ன சொல்வது பெண்ணே? என்னிடம் கொடுக்க ஒன்றும் இல்லையே!
காலையில் வந்ததற்கு சிவபக்தை சங்குனா தானமளித்தாள்
தானமளித்து அவள் கடவுளின் வேலையை செய்தாள்
பாரம்பரியமாக சொன்னதை செய்து என்ன பயன்?
நான் செய்தவற்றுக்கு கடவுளே சாட்சி
பசியில் இருப்போருக்கு உணவு கொடுக்கும்படி மதம் சொல்கிறது
கொடுத்து ஒன்றும் பயனில்லை என்காதே, பாண்டுரங்கன் ரசிப்பார்
தாய் கொண்டிருக்கும் கடவுள் நம்பிக்கையை, மகளும் பின்பற்றுவாள்
தெரியாத இடத்துக்கு சென்றாலும் கடவுள் அவளுக்கு துணை நிற்பார்
தானமளித்தால் மோட்சம் கிடைக்கும்
சிறு தென்றல் வந்தாலும் மெல்லிலைகள் பறக்கும்
தானம் செய்தால், தயாளமாக செய்
பசியில் வாடுபவரை வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்
எமன் வீட்டுக்கு வந்தபோது குடிக்க நீர் கொடுத்தேன்
பசித்திருப்பவரின் நிலை புரிந்து கிளம்பி சென்றான்
விதியில் இருப்பதே நடக்கும்
கோவிலுக்கு சென்று மதபோதனை புரிந்து கொண்டேன்
ஏழை என்பதால் என்னை அவமதிக்கிறார்கள்
கடவுளிடம் கைகூப்பி என் சிரமங்களை சொல்வேன்
ஏழையான நான் கிழிந்த துணிகளை தைத்து போடுவேன்
ஆனாலும் அதை பற்றியே மக்கள் பேசுவார்கள்
ஏழ்மையில் வாழ எனக்கு தெரியும் சகோதரனே நீ அஞ்சாதே
நிலவில் இருக்கும் கறை ஒருநாள் மறையும்
ஏழ்மையால் தைரியம் இழக்காதே
நிலவின் கருப்பு கறை ஒருநாள் மறையும் கலங்காதே
ஒருவரின் ஏழ்மையை எப்படி கிண்டல் செய்யலாம்
மதியத்தின் நிழல் ஓரிடத்தில் நிலைத்து நிற்காது
ஏழ்மையை கிண்டல் அடிப்பவர்களுக்கு
மரணம் நேர்கையில், கடவுள் தேவையானவற்றை சொல்வார்
ஏழ்மையினால் அவளுடன் உறவு முறித்தாய்
விழுந்த மல்லிகை மற்றும் மொக்ரா மொட்டுகளை காற்று அடித்து செல்லும்
முற்பிறவியில் நடந்தது நடந்ததுதான்
என்னை சமாதானப்படுத்தாதே எனக்கு எல்லாம் தெரியும்
*கொசாவி: உலகாதார இன்பங்களை துறந்த துறவி. செம்மண் நிற உடைகளை உடுத்துவார். மத சடங்குகளை செய்யும் சாதிக்கும் இதுவே பெயர்