நான் சபர்பாதாவை அடைந்தபோது இரவாகியிருந்தது. பந்துவன் தாலுகாவில் உள்ள குஞ்சியா கிராமத்தின் எல்லையில் உள்ள சாலைகளில் இல்லாமல் பதினொரு வீடுகள் உள்ளன -- இவை தான் சவர் (சபர் என்றும் அழைக்கப்படுகிறது) சமூகத்தைச் சேர்ந்தோரின் சிறிய மண் வீடுகள்.
பாதி இருளில் மூழ்கியிருக்கும் அந்த வீடுகள், மேலும் அடர்ந்து வளரும் காடுகளின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. அங்கிருந்து அவை துவர்சினி மலையுடன் இணைகிறது. சால், செகுன், பியல் மற்றும் பலாஷ் மரங்கள் நிறைந்த இந்த காடு, பழங்கள், பூக்கள் மற்றும் காய்கறிகள் என உணவுக்கும், வாழ்வாதாரத்திற்குமானது.
சவர் சமூகம், மேற்கு வங்கத்தில் சீர்மரபினர் (DNTs) மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வரிசையில் வருகிறது. காலனித்துவ பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தால் (CTA) 'குற்றவாளிகள்' என்று முத்திரை குத்தப்பட்ட பல பழங்குடியினரில் இவர்களும் அடக்கம். 1952 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் இந்தச் சட்டத்தை ரத்து செய்தது. எனவே இவர்கள் இப்போது அறிவிக்கப்படாத பழங்குடியினர் (DNTs) அல்லது நாடோடி பழங்குடியினர் (NTs) என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
இன்றும், சபர்பாதாவில் (சபர்பாரா என்றும் அழைக்கப்படுகிறது) உள்ள குடும்பங்கள், காடுகளை வாழ்வாதாராமாக கொண்டுள்ளனர். 26 வயதான நேபாளி சபர் அவர்களில் ஒருவர். அவர் புருலியா மாவட்டத்தில் உள்ள தனது மண் வீட்டில் தனது கணவர் கால்து, இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வருகிறார். ஒன்பது வயதாகும் மூத்த மகள், இன்னும் 1ம் வகுப்பில் படித்து வருகிறாள். இரண்டாவது பெண், சிறு குழந்தை, இளையவள், பால்குடி மாறாத கைக்குழந்தை. குடும்பத்தின் வருமானம் சால் (ஷோரியா ரோபஸ்டா) இலைகளைச் சார்ந்தது.




