சில நேரங்களில் பக்தர்களுடன் கடவுளர் பயணிப்பதுண்டு. குறைந்தபட்சம், அங்கர்மோதி தெய்வம் அப்படித்தான் பயணிக்கிறது.
45 வருடங்களுக்கு முன், தாய்-சன்வார் கிராமத்தில் அந்த தெய்வம் வாழ்ந்தது. ”அங்கர்மோதி அம்மா, மகாநதிக்கும் சுகாநதிக்கும் இடையே இருந்தார்,” என்கிறார் ஈஷ்வர் நேதம். கோண்ட் பழங்குடியான அவருக்கு 50 வயதாகிறது. பழங்குடி தெய்வத்தின் பிரதான பூசாரியாக இருக்கிறார்.
புலம்பெயர்ந்தாலும் அங்கர்மோதியின் புகழ் மங்கவில்லை. கிராமத்திலிருந்தும் பிற இடங்களிலிருந்து 500-லிருந்து 1,000 பக்தர்கள், இன்னும் கோவிலுக்கு தினசரி வருகின்றனர். கண்காட்சிக்கு தெய்வத்தின் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் கிராமத்தையும் அணையையும் சுட்டும் வகையில் கங்க்ரெல் மடய் என்றும் அழைக்கப்படுகிறது. தெய்வத்தின் தோழமைகளும் அவ்வண்ணமே தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு பிறகு வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, வருடாந்திர கொண்டாட்டத்துக்காக அங்கர்மோதி, அருகாமை கிராமங்களிலிருந்து தெய்வங்களை அழைக்கும்.
“எங்களின் மூதாதையர் காலத்திலிருந்து ஒவ்வொரு பழங்குடி கிராமத்திலும் இந்த விழாவை நாங்கள் கொண்டாடி வருகிறோம்,” என்கிறார் கோண்ட் சமூகத்தின் தலைவரான விஷ்ணு நேதம். விழாவை ஒருங்கிணைக்கும் குழுவில் அவரும் ஒருவராக இருக்கிறார்.
“மடய் எங்களின் பாரம்பரிய பழங்குடி பண்பாட்டின் அங்கம்,” என்கிறார் அவர். உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் விழாவுக்கு வருவார்கள். அறுவடைக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அடுத்த வருடத்துக்கான ஆசிர்வாதம் கேட்கும் வகையிலும் பூக்கள் அளிப்பார்கள். வருடந்தோறும் மாவட்டத்தில் ஒருங்கிணைக்கப்படுகிற 50 விழாக்களில் ஒன்றுதான் இந்த மடய். மத்திய இந்திய மாநிலத்தின் மாவட்டத்தில் நடத்தப்படு மடய்களின் முதலாவது இது.










