உள்ளூர் தபால் நிலையத்தின் ஜன்னல்கள் லேசாக திறக்கிறது. எட்டிப் பார்க்கும் தபால்காரர் நாங்கள் வருவதை கவனிக்கிறார்.
புன்னகையுடன் தபால் நிலையத்துக்குள் நம்மை ரேணுகா வரவேற்கிறார். ஓர் அறைக்குள் தபால் நிலையம் இயங்குகிறது. அந்த அறையில் இருக்கும் கதவு வீட்டுக்கு செல்கிறது. காகிதம் மற்றும் மையின் மணம் அந்த சிறு இடத்துக்குள் நம்மை வரவேற்கிறது. அந்த நாளுக்கான கடைசி தபால்களை ஓரமாக அடுக்கி வைக்கும் அவர், புன்னகைத்து அமரும்படி சைகை காட்டுகிறார். “வாங்க. வாங்க… வசதியாக உட்காருங்கள்.”
வெளியில் இருக்கும் வெப்பநிலைக்கு முரணாக தபால் அலுவலகம் குளுமையாக இருக்கிறது. அறைக்குள் இருக்கும் ஜன்னல் தான் தென்றலை கொண்டு வருகிறது. வெள்ளை பூசப்பட்ட சுவர்களில் வரைபடங்களும் பட்டியல்களும் கையால் செய்யப்பட்ட போஸ்டர்களும் தொங்குகின்றன. சிறிய அறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்கிறது.ஒரு மேஜையும் சில அலமாரிகளும் அறையின் பெரும்பாலான பகுதியில் ஆக்கிரமித்திருந்தாலும் நெருக்கடியாக இருக்கவில்லை.
64 வயதாகும் ரேணுகாப்பாதான் தும்குர் மாவட்டத்தின் தேவராயப்பட்னத்தின் கிராமப்புற தபால் சேவகர். அவருக்குக் கீழ் ஆறு கிராமங்கள் வரும்.
அந்த தபால் நிலையத்தின் அதிகாரப்பூர்வ அலுவல் நேரம் காலை 8.30 மணிக்கு தொடங்கி, மதியம் 1 மணிக்கு முடிகிறது. ஆனால் அங்கு பணிபுரியும் ஒரே தபால்காரரான ரேணுகா பிரசாத் அதிகாலை 7 மணிக்கே பணி தொடங்கி விடுகிறார். மாலை 5 மணி வரை வேலை தொடரும். “என் வேலையை முடிக்க நான்கரை மணி நேரங்கள் போதாது,” என அவர் விளக்குகிறார்.








