பேரணியின் இசை: காணொலியைப் பார்க்க

”கோடையில் நான் ஒரு வாசுதேவ்(பாணர்); குளிர்காலம் வந்துவிட்டால் விவசாயி..” எனும் பிவா மகாதேவ் காலேவுக்கு வயது 70. வாசுதேவ் சமூகத்தினர் மகாராஷ்டிரத்தில் குறிப்பாக கண்ணனை வழிபடும் ஒரு பாணர் வகையினர் ஆவர். ஊர் ஊருக்குப் போய் நாட்டுப்புற தெய்வீகப் பாடல்களைப் பாடி இரந்து வருவாய் ஈட்டுவதும் இவர்களின் வாழ்க்கைமுறை ஆகும்.

நாசிக் மாவட்டம், பேந்த் வட்டம், இரெய்ட்டாலே கிராமத்திலிருந்து பிப்.20-21 விவசாயிகள் பேரணிக்கு வந்திருந்தார், பிவா. ஒரு வாசுதேவாக - அவர் குடும்பத்தின் மரபுத் தொழிலாக- பேந்த் வட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு நடையாகவே சென்றுவருகிறார். அத்துடன், செப்டம்பர் முதல் பிப்பரவரிவரை தன் கிராமத்தில் விவசாய வேலைகளில் இறங்கிவிடுகிறார்.

கடந்த வாரப் பேரணியின்போது நிறைய விவசாயிகள் தங்களின் மரபு இசைக்கருவிகளுடன் வந்திருந்தனர். 20ஆம் தேதி தொடங்கிய போராட்டமானது, அரசாங்கத்தின் எழுத்துபூர்வமான உறுதிமொழியை அடுத்து 21 நள்ளிரவில் விலக்கிக்கொள்ளப்பட்டது.

Sonya Malkari, 50, a Warli Adivasi, was playing the traditional tarpa.
PHOTO • Sanket Jain
Vasant Sahare playing the pavri at the rally.
PHOTO • Sanket Jain

இடது: பேரணியின் முதல் நாளன்று (2019 பிப்.20) வார்லி பழங்குடியினரான சோன்யா மல்கரி, 50, மரபான தர்பாவை இசைத்துக்கொண்டிருந்தார். மகாராஷ்டிரத்தின் பல்கார் மாவட்டம், விக்ரம்கட் வட்டம், சகாரே கிராமத்திலிருந்து அவர் வந்திருந்தார். மாநிலத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு மத்தியில் நாசிக்கின் மகாமார்க் பேருந்துநிலையத்தில் சோன்யா இசை நிகழ்த்திக்கொண்டிருந்தார். வலது: நாசிக் மாவட்டம், சுர்கனா வட்டம், வாங்கன் சுலே கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்த் சகாரே, 55. பவ்ரியை இசைத்துக்கொண்டிருந்தார். பட்டியல் பழங்குடியினமான கோக்னா சமூகத்தைச் சேர்ந்த அவர், வனத்துறை வசமுள்ள 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டுவருகிறார்

Biva Gale singing devotional folk songs.
PHOTO • Sanket Jain

நாட்டுப்புற தெய்வீகப் பாடல்களைப் பாடும் பிவா காலே. நாட்டுப்புற தெய்வீகப் பாடல்களைப் பாடும்போது பிவா காலே சிப்லி இசைக்கிறார். நாசிக் மாவட்டம், பேந்த் வட்டம், ரெய்ட்டாலே கிராமத்தைச் சேர்ந்த இவர், ஊர் ஊராகப் போய் நாட்டுப்புற தெய்வீகப் பாடல்களைப் பாடியபடி இரந்துவாழும் கண்ணன் வழிபாட்டுச் சமூகத்தைச் சேர்ந்தவர்

Gavit and Chavan, along with other farmers from Dindori taluka, are singing songs in praise of the farmers’ protest
PHOTO • Sanket Jain

தந்தனாவை(ஒரே கம்பியால் ஆனது) மீட்டியபடி இருந்த குலாப் காவித் (இடது),49. நாசிக்கின் திண்டோரி வட்டம், போப்சி கிராமத்தைச் சேர்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த பௌசாகேப் சவான், 50, (வலப்பக்கம், சிவப்புத் தொப்பி அணிந்தவர்), கஞ்சரியை இசைத்துக்கொண்டிருந்தார். திண்டோரி வட்டத்தின் சக விவசாயிகளுடன் சேர்ந்து விவசாயிகள் போராட்டத்தைப் போற்றும் பாடல்களைப் பாடும் காவித்தும் சவானும்

Farmers dancing and singing while awaiting the outcome of the meeting between representatives of the government of Maharashtra and All India Kisan Sabha leaders
PHOTO • Sanket Jain

பிப்ரவரி 21 இரவில் பேச்சுவார்த்தை முடிவுக்காகக் காத்திருந்த வேளையில் பாடல்களும் ஒருங்கிணைந்த ஆட்டமுமாக விவசாயிகள்

தமிழில்: இர. இரா. தமிழ்க்கனல்

Sanket Jain

Sanket Jain is a journalist based in Kolhapur, Maharashtra. He is a 2022 PARI Senior Fellow and a 2019 PARI Fellow.

Other stories by Sanket Jain
Translator : R. R. Thamizhkanal

R. R. Thamizhkanal is a Chennai-based independent journalist and a translator focussing on issues related to public policies.

Other stories by R. R. Thamizhkanal